கொண்டு,
“ஓகே நந்திதா, யூ கேரி ஆன்... உங்களை காலையில இருந்து எந்த மீட்டிங்கிலேயும் பார்க்க முடியலை அதான் இந்த பக்கம் வரவும், ஒரு ஹாய் சொல்ல வந்தேன்,” என்று சொல்லிவிட்டு அவளின் அறையை விட்டு சென்றான்.
அவன் சென்ற பின் ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த நந்திதாவிற்கு என்ன என்று சொல்ல முடியாத வண்ணம் மனம் லேசாகி இருந்தது....
கண்களை மூடி அதை ரசித்தவளை, “ஹேய் நந்து...” என்ற சந்தோஷின் குரல் இந்த உலகத்திற்கு அழைத்து வந்தது.
கண்களை திறந்து எதிரே நின்றவனை பார்த்து முறைத்தாள் நந்திதா.
அவனை பார்க்கவே அவளுக்கு எரிச்சலாக இருந்தது!
“லுக் ஹியர் சந்தோஷ், என்னை இந்த மாதிரி கூப்பிடுறதை நிறுத்துங்க... என் பேர் நந்திதா...”
“என்ன நீ இப்படி எரிஞ்சு விழுற? ஏதோ ஒரு தப்பு செய்துட்டேன் அதுக்காக நம்மோட காதல் இல்லைன்னு ஆகிடுமா என்ன?”
“ஷட் அப்...”
“கூல் டவுன் நந்து... நீயே யோசிச்சு பாரு, இவ்வளவு வருஷம் கழிச்சு நாம ஏன் சந்திக்கனும்??? நீ பெங்களூருவில் இருந்து இங்கே வந்திருக்க, நானும் புது கம்பெனி ஜாயின் செய்திருக்கேன்.... நாம சந்திக்கனும்றது டெஸ்டினி....”
“மண்ணாங்கட்டி!”
“நந்து... நீ கோபப் பட்டாலும் எரிஞ்சு விழுந்தாலும் எனக்கு உன் மேல கோபமே வரலை... பழைய நந்துவா தான் என் கண்ணுக்கு தெரியுற... இன்னைக்கு அதுவும் ரொம்ப அழகா