“ஏன் ஹேமா கமல் கிட்ட போய் சொன்ன???”
“சுமி... கமல்...?” ஹேமாவின் குரல் உடைந்து ஒலித்தது...
மூச்சை மெல்ல இழுத்து, வெளியே விட்டு, தன்னை சமணப் படுத்திக் கொண்ட சுமித்ரா, “அவரால என் கிட்ட எதையாவது மறைக்க முடியும்னு நினைக்குறீயா???” என்றாள்.
ஹேமா பக்கம் இருந்து சத்தம் வரவில்லை...
“ஹேமா???””
இப்போதும் அமைதி...
“ஹேமா...?? அழுறீயா??”
“....”
“என்ன ஹேமா நீ??? அழாதே...”
“சாரி சுமி... நான்...”
“ஹேய்... அழாதேன்னு சொல்றேன்ல...”
“ம்ம்ம்ம்...”
“ஹேமா... நீ கமல் கிட்ட சொல்லி இருக்குறதை வச்சே என்னால புரிஞ்சுக்க முடியுது... ஆனால்... ஆனால்... வேற எந்த வாய்ப்புமே இல்லையா?? சர்ஜரி... வேற மெடிசின்... ஏதாவது??? ஏதேதோ புது மருந்து வந்துட்டதா சொல்றாங்களே...”
“சுமி... அப்படி ஏதாவது செய்ய முடியும்னா நான் கமல் கிட்ட சொல்லாம அதை முயற்சி