Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சினேகா அவளின் ஹாஸ்டல் அறைக்குள் வந்த உடனேயே,
“எப்படிப்பா போச்சு இன்னைக்கு டே, நல்லபடியா தானே போச்சு?” என அக்கறையும், ஆர்வமுமாக விசாரித்தாள் மஹாலட்சுமி.
ஹான்ட்பேகை தன்னுடைய கட்டிலின் மீது வீசி விட்டு, மஹாலக்ஷ்மியின் அருகே சென்று அமர்ந்தாள் சினேகா.
“ரொம்ப இன்ட்ரஸ்டிங் டேக்கா...”
“அப்படி என்ன?”
“காலைல நான் போய் அந்த எம்.டியை பார்த்தேனா,” என்று தொடங்கி அவளுக்கும் ஆகாஷிற்கும் நடுவே நடந்த உரையாடலை சுருக்கமாக சொன்னாள் சினேகா.
“எப்படியோ பேசி உன்னையே ஓகேன்னு சொல்ல வச்சுட்டீயே, குட், குட்,” என்றாள் மஹா பாராட்டுதலாக!
“அப்படி சொல்ல முடியாதுக்கா, இனிமேல் தான் நிஜ டெஸ்ட் ஆரம்பமாகி இருக்கு,” என்றாள் சினேகா!
“நல்லதா போச்சு. போட்டி, பரீட்சைன்னு இருந்தா தான் சினேகா எல்லாமே சுவாரசியமா இருக்கும்.”
“ஹ்ம்ம்... ஆனாலும் இன்னைக்கு ரொம்ப ஓவரா தான் பேசிட்டேன்...”
“அதான் அந்த ஆளே அதை பத்தி ஒன்னும் சொல்லலையே அப்புறம் நீ ஏன் ஃபீல் செய்ற?? ஆமாம், அந்த எம்.டி அப்படி இப்படின்னு நேத்து ஓவர் பில்ட் அப் கொடுத்துட்டு இருந்தீயே, இப்போ நேரா பார்த்த பின்னாடி உனக்கு என்ன தோணுது??”