Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 36 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வண்டியை விட்டு இறங்கவும் போலீஸ் வண்டியை ஓட்டும் டிரைவரோ தில்லையை பார்த்து
”என்னப்பா தில்லை பெரிசா அடிபடலை போல இருக்கே, சம்பவம் ரொம்ப சின்னதோ“
”எது சின்னதா யோவ் உசுரே போயிருக்கும், தப்பிச்சி வந்திருக்கேன்“
”அவ்ளோ பெரிய சம்பவமா” என இழுக்க
”இழுக்காதய்யா என்னை பார்த்தா தெரியலை”
”தெரியுது தெரியுது“ என ராகம் போட அவனோ கடுப்பானான்.
”டாக்டர் இருக்காங்கள்ல“
”இருக்காங்க இருக்காங்க போ போ” என அலட்சியமாகச் சொல்ல அவனும் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சிவாவின் வீட்டிற்குள் சென்றான்.
அங்கிருந்த சிவாவை கண்டதும் அவளுக்கு பிடிக்காமல் போனது, அவனோ போலீஸ் உடை அணிந்து ட்யூட்டிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான், அந்நேரம் சம்யுக்தாவும் தில்லையும் வரவே சிரித்தான்
”வாடா வா எவ்ளோ நேரம் உனக்காக காத்திருக்கறது வர்ற நேரத்தைப் பாரு” என சொல்லியவன் சம்யுக்தாவிடம்
”ஹாய் எப்படியிருக்கீங்க” என அன்பாக கேட்க அவளோ
”ஒரு போலீசா இருந்துக்கிட்டு போயும் போயும் ஒரு கெட்டவனுக்கு, தாதாவுக்கு உதவி செய்றீங்களே இது உங்களுக்கே நியாயமா” என கேட்க தில்லையோ அதிர்ந்தான்
”அம்மா தாயே விட்டா நீ இந்த ஊர்ல இருக்கற எல்லார்கிட்டயும் நியாயம் கேட்ப போல,