”சரிண்ணா நான் பார்த்துக்கறேன்”
”உன் நிழல்கூட அவங்க மேல படக்கூடாது, அவங்க எனக்குச் சொந்தம்“
”தெரியும்ணா நான் பார்த்துக்கறேன் அண்ணா, நீ கவலைப்படாத” என சொல்ல தில்லையோ சம்யுக்தாவிடம்
”வா போலாம்”
”எங்க கூப்பிடற”
”குமாரை போட்டுத் தள்ளப் போறேன்”
”அதுக்கு எதுக்கு நான் வரனும், நான் வரலை நீ போ” என சொல்லியவள் அந்த பெண்களிடம் செல்ல அதைக் கண்ட தில்லையோ கோபத்துடன் அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டுச் சென்றான்
”விடு என்னை விடு“
“பேசாம வா, நீயிருந்தா அந்த பொண்ணுங்களை தப்பிக்க வைச்சிடுவ, என்கூடவே எப்பவும் இருப்பல்ல, இன்னிக்கும் இரு தப்பில்லை வந்து தொலை” என அவளை இழுத்துக் கொண்டு கீழே வந்தவன் அங்கிருந்த தனது ஆட்களைக் கண்டான்
”எல்லாரும் ரெடிதானே“
”ரெடிண்ணா”
”எவன் கையில அந்த குமார் சிக்கினாலும் சரி, எனக்காக பார்க்க வேணாம், போட்டுடுங்க மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அவர்களும் சரியென தங்களுக்கென இருந்த பைக், ஜீப், கார் என வண்டிகளில் புறப்பட தில்லையோ சம்யுக்தாவை ஜீப்பில் ஏற்ற அவளோ