”முடியாது”
”அவன் உனக்கு தாலி கட்டிட்டா அது கல்யாணம் ஆயிடுமா என்ன, இதுல அவன் செத்தும் அலங்காரம் குறையாம இருக்கியே யாரை ஏமாத்தற, ஊரை ஏமாத்தவா இல்லை தில்லை ஏதாவது சொத்து கித்து வைச்சிருக்கான்னு அதை அடைய ஆசைப்படறியா”
”எனக்கு பணம் தேவையில்லை, எனக்கு என் புருஷன்தான் வேணும்” என்றாள் கண்ணீருடன் அதற்குள் சிதம்பரமே வெளியில் வந்து நிற்கவும் அங்கு சம்யுக்தாவை கேள்வி கேட்ட அனைவரும் அமைதியானார்கள். சிதம்பரமோ
”போதும் இதுக்கு மேல யாராவது ஒரு கேள்வி கேட்டீங்க அவ்ளோதான்” என சொல்ல கான்ஸ்டபிளோ சம்யுக்தாவிடம்
”இங்க பாருங்க கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருந்தா காலம் முழுக்க பதில்தான் சொல்லனும், பேசறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க நீங்க இப்ப நடையை கட்டுங்க கிளம்புங்க” என சொல்லியதோடு விடாமல் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வந்த காரில் ஏற்றி வழியனுப்பிவிட்டு சுற்றி முற்றி பார்த்த கான்ஸ்டபிள் அவசரமாக வேறு பக்கமாக நடந்தார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் காலி இடம் இருந்தது. அவ்விடம் வந்ததும் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை எடுத்துப் பார்த்தவர் அவசரமாக சுற்றி முற்றி யாரேனும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டு மெதுவாகப் பேசினார்
”ஹலோ சார் இருக்கீங்களா”
”இருக்கேன்”
”என்ன சார் இது, பிரச்சனை பெரிசாயிடும் போல இருக்கே“