”ஆமாம் சார்”
”என்ன அது”
”இவ்ளோ நாள் எனக்கு உதவி செய்ற நீங்க யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா”
”நான் தில்லையோட விசுவாசி, நீ எனக்கு விசுவாசி, இது போதாதா”
”இல்லை நீங்க யாருன்னு”
”தெரிஞ்சிக்காம இருக்கறது உனக்கு ரொம்ப நல்லது, உனக்குத் தேவை பணம், அது கரெக்டா உன்கிட்ட வந்துடும், நீ எனக்கு விசுவாசியா இரு அது போதும், அங்க நடக்கறதை எனக்குச் சொல்லு, நான் சொல்ற வேலையை நீ செய், தில்லை செத்துட்டான்னு உலகமே நம்புது கூட சம்யுக்தாவும் நம்பினாதான் தில்லையோட கேஸை மூடுவாங்க, சம்யுக்தா நகர்ந்தாலே சிதம்பரமும் அமைதியாயிடுவான்”
”சரிங்க சார் பேசாம அந்த சிதம்பரத்தை வேற ஊருக்கு மாத்தற வேலையை செய்துடுங்களேன்“
”வேணாம் சிதம்பரத்தால பிரச்சனை வர்ற வரைக்கும் பார்க்கலாம், அவனால பிரச்சனை வந்தது ஒண்ணு அவனை வேற ஊருக்கு மாத்தறது இல்லை அவனை உலகத்தை விட்டே அனுப்பிடறது”
”சார்ர்ர்ர்” என அலற
”உன்னை எதுவும் செய்ய மாட்டேன் தில்லை கேஸ் விசயத்தில வேற யாராவது தலையிடாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு”
”என்ன சார் நீங்க, இதுவரைக்கும் நீங்க என்ன சொல்றீங்களோ அதையே செஞ்சி பழகிட்டேன், உங்க ஆளுங்கதான் இங்க எல்லா இடத்திலயும் இருக்காங்களே, அவங்களைத் தாண்டி என்ன சார் நடந்துடப் போகுது”