”சிவாவையும் அவன் ஒய்ப் டாக்டர் ஜனனியும் கண்டுபிடிக்கனும்”
”நான் என்ன செய்றது சார்”
“நீயா தில்லையிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு போய் அக்கம் பக்கம் இருக்கறவங்க கிட்ட விசாரி”
”சார் அது எந்த அடுக்குமாடி, எந்த ஏரியா எதுவும் தெரியாதே சார்”
”சம்யுக்தா சொல்லலையா“
”அவங்களுக்கே தெரியாதே சார், பாவம் சார் அந்தப் பொண்ணு““
”ஆமாம் பாவம்தான் ஆனா முட்டாளும் கூட, இப்படியா தன் வாழ்க்கையை தானே கேள்விக்குறியாக்கிக்குவாங்க”
”விடுங்க சார் சின்ன பொண்ணுதானே விவரம் தெரியலை“
”நான்தான் அவளுக்கு உண்மையை உணர்த்தனும், விட்டா தில்லையை நினைச்சி இவள் பைத்தியமாயிடுவா போல இருக்கு”
”சார் தில்லை செத்ததுமே கேஸை மூடிட்டாங்க, திரும்பவும் அந்த கேஸ் திறக்கனுமா, மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கலையே சார்”
”நான் வாங்கிக்கிறேன், இப்பவே கமிஷனர் ஆபிஸ் போறேன், குளோஸ் பண்ண தில்லையோட கேஸை ரீஓபன் பண்றேன், அவன் சாவுல இருக்கற மர்மத்தை கண்டுபிடிக்கிறேன்”
”சார் ஒரு விசயம் சொல்லட்டுமா“