”ஆமாம் சார் அந்தாளே இந்தப் பொண்ணை விட நினைச்சாலும் இந்தப் பொண்ணு அந்தாளை விடாது போல இருக்கு சார்”
”இப்ப சம்யுக்தா எங்க”
”அந்தாளு வீட்டுக்குள்ள“
”அவன் என்ன செய்றான்”
”அந்த பொண்ணைப் பார்த்து வழியறான் சார்”
”வழியறானா அப்படின்னா”
”அய்யோ உங்களுக்குப் புரியலை அதான் சார் காதலிக்கறானாம்”
”இது வேறயா ஆமா சம்யுக்தாவுக்கும் அவன் மேல ஏதாவது” என இழுக்க
”யாரு அந்தப் பொண்ணா அது தெளிவா இருக்கு சார், அதோட எண்ணம்லாம் தில்லை மேலயே இருக்கு, எப்படியும் தில்லையை கண்டுபிடிச்சிடுவாங்க போல இருக்கு சார்“
”ஆமாம்யா சிதம்பரம் நேத்தே தில்லை சம்பந்தப்பட்ட தகவலை கண்டுபிடிச்சிட்டான்”
”என்ன சார் சொல்றீங்க, நீங்க இதை கவனிக்கலையா”
”கவனிச்சேன் மத்த தகவல்களை அழிக்கறதுக்குள்ள அவன் முந்திக்கிட்டான். ஒரு தடயம்தான் கிடைச்சிருக்கு ஆனா, அது என்னன்னு தெரியலை நீதான் அது என்ன ஏதுன்னு விசாரிச்சி எனக்குச் சொல்லனும்“
”அவ்ளோதானே சின்ன விசயம் சார், செஞ்சி முடிச்சிடறேன்”