“உண்மையை தான் சொல்றேன் ஈஷ். உன் பர்த்டே நவம்பர் 17th.”
“எப்படி கண்டுப்பிடிச்சீங்க?”
“காலேஜ்ல உன்னோட கிளாஸ்ல இருக்காளே ரேணுகா, அவக் கிட்ட பேசும் போது நைஸா கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.”
“அடப்பாவி! இருந்தாலும் உங்க பர்த்டேன்னு சொல்லி இருந்தா கார்டாவது வாங்கிட்டு வந்திருப்பேன்.”
“பரவாயில்லை ஈஷ். நமக்குள்ளே எதுக்கு அதெல்லாம்?”
“நாம லவ் செய்ய ஸ்டார்ட் செய்தப்புறம் வர முதல் பர்த்டே, ஒண்ணுமே செய்யாம இருந்தா தப்பு ஜெய்.”
“அப்போ ஈஸியா ஒரு வழி சொல்றேன். என்னைக் கட்டிப் பிடிச்சு ஒரு கிஸ் கொடு!” ஜெய் விளையாட்டாக தான் சொன்னான். ஆனால் புவனேஸ்வரி யோசிக்க ஒரு நொடி கூட எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெய் சொன்னதை செய்பவளாக அவனை இறுக கட்டிப் பிடித்து அவன் இதழ்களில் தன் இதழ்களை பதித்தாள்.
✽✽✽
லெட்டர் மீதிருந்த விரலை எடுத்து தன் உதட்டின் மீது வைத்துப் பார்த்தாள் புவனேஸ்வரி. அன்றைய முதல் முத்தத்தின் அலைகள் இப்போதும் உணர்வதாக அவளுக்குத் தோன்றியது.
சூப்பர் எக்ஸ்ப்ரஸ் போல வேகமாக கிளம்பி ஓடிக் கொண்டிருந்த அவர்களின் காதல் முதல் ஸ்பீட் ப்ரேக்கிலேயே தடம் மாறி தடம்