தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 17 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
அஜய் கிளம்பிப் போன ஒரு சில நிமிடங்களிலேயே விஜய் ஆவலுடன் வந்தான். அவன் தூங்கி எழுந்து நேராக வந்திருப்பதை அவனுடைய கலைந்திருந்த முடியும், நலுங்கி இருந்த உடையும் காட்டியது.
“அம்மா, அஜய் எங்கேம்மா? கிளம்பிட்டானா??”
சந்தேகத்துடன் கேட்டான் விஜய்.
“என்ன புதுசா கேட்குற விஜய்! உன் அண்ணன் என்னைக்கு லேட்டா கிளம்பி இருக்கான்,” என்றாள் சாரதா!
“இல்லம்மா ஒரு சத்தமும் கேட்கலையேன்னு பார்த்தேன்...”
ரோஹினியைப் பார்த்த படி விஜய் இழுக்கவும், அவளுக்கு அவன் கேட்க வருவது புரிந்தது... அதனால் ‘பே பே பே’ என தன் பாணியில் விழித்தாள்.
ரோஹினி சொதப்பி விட்டாள் போலும் என நினைத்துக் கொண்ட விஜய் அதற்கு மேலே அதைப் பற்றி எதுவும் கேட்காமல், சாரதாவும் தொடர்ந்து கேள்விகள் கேட்காமல் இருக்க,
“ஓகேம்மா, நானும் நிரு’க்கு கால் செய்துட்டு ஆஃபிஸ் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றான்.
ஆனால் ஆஃபீஸ் கிளம்பும் முன் ரோஹினியுடன் தனியே பேசக் கிடைத்த இரண்டு நிமிடங்களில்,
“என்ன ரோ பயந்துட்டீயா? நான் தான் சூப்பரா ஸ்கெட்ச் போட்டு கொடுதேன்ல அப்புறம் என்ன? அண்ணா காச் மூச்ன்னு கத்துறதை கேட்கலாம்னு ஆசையா இருந்தேன்,” என்று அப்போது கேட்காமல் விட்டதை கேட்டான் விஜய்.
“பயப்படலை. நீங்க சொன்னதை செஞ்சேன்...”