(Reading time: 33 - 65 minutes)

 

"சீ  நீ எல்லாம் ஒரு பொண்ணு! அன்னைக்கு நல்லவலாட்டம் பெடினியே இன்னிக்கு இவளை இந்த பாடு படுத்த தானா சண்டாளி.  இவ இல்லண்ணா நான் உன்னை கட்டிப்பன் என்று எப்பிடி நினைச்ச ஆங்...."

"நீ எனக்கு கிடைக்கலன்னாலும் பரவாயில்ல ஆனால் என் காதலை மறுக்க காரணமானவ உரிரோடு இருக்க கூடாது அவளவு தான்" என்றால் ஆவேசமாக. அஸ்வினுக்கு சீ என்று போவிட்டது இப்படியும் ஒரு பெண்ணா என்று. மீண்டும் கை உயர்த்தியவனை போலீஸ் தடுத்தது. 

"சர் நீங்க ஹாஸ்பிட்டல் போங்க நாங்க இவங்க எல்லாரையும் பாத்துக்கிரம் நீங்க அப்புறமா வந்து கம்ப்ளைன் பேப்பர்ல சைன் வைங்க இல்லாட்டா ஹாஸ்பிட்டலுக்கு கான்ஸ்டபிளை அனுப்பிறன் நீங்க கிளம்புங்க. விஜயன் சகா யது அனைவரும் போலீஸ் வானில் கைதாகி செல்ல அஸ்வின் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்.

(நீங்க எல்லாம் அஸ்வின் எப்பிடி போலிசோடு வந்தான் என்று கேட்பது புரியுது.  இருங்க சொல்றன்.)

மேகலையும் புவியும் கதைத்துக் கொண்டிருக்கும் பொது தான் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது அவள் டெலிபோனில் பேசிக்கொண்டே கதவைத் திறந்தாள். இவர்களை கண்டது அதிர்ச்சியில் போன் ஆனில் உள்ளை மறந்தே அல்லது வேண்டுமென்றே ஆப் பண்ணாமல் எதிரிகளோடு தொடர்ந்து உரையாடல் நடந்தது.  புவிக்கு ஆபத்து என உணர்ந்த   மேகலை அச்வினிடம் விபரம் தெரிவிக்க  அவன் போலிசோடு அங்கு வந்து சேர்ந்தான். 

ஹாஸ்பிட்டலில் எல்லோரும் புவிக்காக பிரார்த்தித்தனர் அஸ்வின் குடும்பம் மாற்றும் புவியின் பெரியப்பா குடும்பம்.  திவாகர் தனது தங்கையின் கேடு கேட்ட புத்திக்காக அனைய்வரிடமும் மன்னிப்பு கோரினார். பாவம் அவருக்கும் என்ன தெரியும் இப்பிடி ஒரு அரக்கியை வீட்டில் பாசமாக வளர்த்தோம் என்று. அவரே அச்வினிடம் எனக்காக கூட அவமேல கொடுத்த கம்ப்ளைண்டை வாபஸ் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 

விஜயன் மற்றும் அவனது கூட்டாளிக்கு மரண தண்டனையும் யதுக்சிகாவுக்கு  இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 

சரியாக ஒரு மாத காலத்தின் பின் புவியின் உடல்  நன்றாக  தேர்ச்சியடைந்தது. மேகலையின் கவனிப்பால் என்று சொன்னால் கூட மிகையில்லை. 

பின் அவளின் படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல சுப  முகூர்த்தத்தில் அஸ்வின் தனது தேவதையின் கழுத்தில் மங்கள நாண் ஏற்றி அவளை தன் வாழ்க்கை துணையாக்கி கொண்டான்.  அது மட்டுமல்லாது அவளது  கனவு கம்பனியை  உருவாக்கவும் அவளுக்கு பக்க பலமாய்  நின்று தோள் கொடுத்தான்.

பிறகென்ன சந்தோசமான இல்லறத்தின் வெற்றியில் முத்தாக  ஒரு பெண் குழந்தையை  பெற்றெடுத்தனர். அவளுக்கு ஆசையாக முக்தா என்று பெயர் சூட்டினர்.

"ன்னங்க மாப்பிளை வீட்டுக்காரங்க வரப்போறாங்க அங்க   புராணம்  சொல்லிட்டு இருக்கீங்க  நீ இன்னும் ரெடியாகலையா சாஹித்தியா" என்ற படி வந்தாள் புவிக்கா.

"ஏன் புவி மாமா என்ன வெட்டி பேச்சா பேசிட்டிருந்தார் உங்க காதல் புராணம் தானே அரங்கேறிக் கொண்டிருந்தது." என்று சொல்லி சிரித்தார்கள். சர்ஜிகாவும் அவள் காதல் கணவன் நவீனனும். 

அங்கு அழகாய் வெட்கப்பட்டாள் அஸ்வினின் காதல் மனைவி புவிக்கா.

"பாருங்க தாத்தா உங்க தேவதை இப்ப  கூட அழகாய் வெட்கப் படுறாங்க இல்ல" என்றாள் அவர்களின் பேத்தி சாஹித்தியா.

"என் தேவதை எந்த வயசில வெட்கப்பட்டாலும் அழகு தான் இல்ல புவி" என்று அவள் தோள் அணைத்தான் அஸ்வின்.

"ஓஓஓ" அங்கெ ஒரு சிரிப்பலை எழுந்தது.

சுநேர சுப முகூர்த்தத்தில் அஸ்வின் புவிக்காவின் பேத்தி சாஹித்யாவுக்கும் மதன் ரூபாவின் பேரன் சஞ்சய்க்கும் திருமணம் நிச்சயம் ஆகியது. 

அங்கே ஒரு இனிய கீதம் ஒலித்தது.

முற்றும்!

Go to episode # 14


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.