(Reading time: 14 - 27 minutes)

 

"ஹே சூப்பர் டா, ஐயம் வெரி ஹாப்பி பார் யூ"

"ம்ம்ம்ம், இங்க சென்னையிலேயே கெடச்சுருச்சு டீ, நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க"

" ம்ம்ம் கன்க்ராட்ஸ் டா, அம்மா கிட்ட சொல்லிட்டியா?"

"நான் எப்பவுமே உன்கிட்ட தான முதல்ல சொல்லுவேன்"

"ம்ம்ம்"

"இவனிங் அங்க வரேன் டீ அம்மா கிட்ட நேர்ல சொல்லிக்கலாம்"

"ஐ ஜாலி, ஆனா நான் ஆபீஸ் போகணுமே ஷோ இருக்கு டா"

"ஹ்ம்ம் பத்து மணிக்கு தான ஷோ நான் ப்ளைட்ல தான் வரேன், 5 க்கு அங்க இருப்பேன் நம்ம வெளில போயிட்டு அப்படியே டின்னர் முடிச்சுட்டு அப்புறம் நீ ஆபீஸ் போய்க்கோ சிம்பிள்"

"ம்ம்ம்ம் அப்போ ஓகே"

"ஓகே பை"

போனை வைத்து விட்டு அமர்ந்தவளுக்கு மிகுந்த சந்தோஷம் தான் இருந்தாலும் வேலைக்கு போன பின் வாரம் ஒரு முறையாவுது அவளை பார்க்க ரகு வருவானா என்ற எண்ணம் சோர்வை தர அதை பின் தள்ளி விட்டு நாட்டிய பள்ளிக்கு கிளம்பி போனாள்.

மேகாவை பார்த்து பல கதைகள் பேசி முடித்து பயிற்சி அளித்து விட்டு வீடு திரும்பியவள் தன் அறைக்கு சென்று சட்ட்று ஓய்வெடுத்தாள்.

ஏதோ தோன்ற தன் லேப்டாப்பை எடுத்தவள் பேஸ்புக்கை ஓபன் செய்து பார்த்தாள்.ஏனோ திடீரென்று ஆதியின் நினைவு மேலோங்கி இருப்பதை போன்ற உணர்வில் அவன் பேசி ஓபன் செய்தால் அதில் இந்திய வருவதாக அவன் பதிவேற்றியிருந்த தகவல் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

ஒரு முறை அவனை பார்த்தால் கூட போதுமே என்று சிறு ஆசை தோன்ற அவனை பார்த்து என்ன ஆகா போகிறது என்று உடனே அந்த ஆசைக்கு முற்று புள்ளி வைத்தாள்

அதில் இருந்து மனதை திருப்ப தன் பக்கத்தை பார்த்தவள் அப்போது தான் பிரகாஷிடம் இருந்து அவளுக்கு request வந்திருப்பதை கவனித்தாள். மீண்டும் எதற்கு இவன் என் வாழ்வில் வர நினைக்கிறான் ஒரு முறை வந்து என்னை ஏமாற்றி இந்த அளவுக்கு அழ வைத்தது பத்தாதாமா?

அதை கேன்சல் செய்ய போனவள் ஒரு நிமிடம் யோசித்தாள். அவன் மட்டுமா தப்பு செய்தான் ஒரு வகையில் நானும் தான் தவறு செய்தேன் என்று நினைத்தவள் அவன் request-ஐ அக்சப்ட் பண்ணினாள். அதோடு அதை மறந்தும் போனாள்.

மாலை ரகு வரவும் அவனுடன் கோவில் மால் என சுற்றி விட்டு இரவு unavai முடித்துக் கொண்டு ரேடியோ ஆபீஸ் போனவள், அங்கே மேகா பத்ரகாளி மாதிரி கண்களை உருட்டிக் கொண்டு நின்றதை பார்த்தவுடன் தான் அவளிடம் சொல்லாமலே சென்று விட்டோம் அவளை  மறந்து விட்டோம் என புரிந்தது.

அவள் அருகில் சென்று "ஹிஹிஹி மேகா வந்துட்டியா எப்படி டா வந்த? ஐயம் சாரி அது வந்து..." என்று தொடங்கியவளை நிறுத்தி கண்ணா பின்னா என திட்டி தீர்த்து விட்டாள். இது எல்லாத்தையுமே நம்ம மது ஏதோ ஆஸ்கர் அவார்ட் வாங்குற ரேஞ்சிற்கு ஹிஹிஹிஹி நு வழிஞ்சுட்டே வாங்கிகிட்டா  வேற வழி.

அவள் திட்டுவதை சற்று நிறுத்தவும் இது தான் கேப்னு

"ஹே ரிலாக்ஸ் டா, சாரி மா உன்ன பொய் மறப்பனா?"

"......"

"அப்படி மொறைக்காத டீ, ரகு வந்திருந்தான் அதான் வெளில போயிட்டு அப்படியே வரும் போது...."

"ஒ அதான் மேடம்க்கு நான் கண்ணுக்கு தெரியலையா, அந்த கடன்காரன் வந்த உடனே வேலைய ஆரம்பிச்சுட்டானா?"

"ஹே அவன ஏன் டீ திட்டற சாரி இனி இப்படி நடக்காது வா"

மேகா ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்குள் அவர்களுடன் வேலை செய்யும் யாதவ் அங்கு வந்தான். அப்பாடா தப்பிச்சோம் என்று மது பேரு மூச்சு விட்டாள்.

" ஹே மது உன்ன மேனேஜர் கூப்பிட்டாரு"

" தேங்க்ஸ் யாதவ் இதோ போறேன்" என்று எஸ்கேப் ஆகிவிட்டாள்.

"மே ஐ கம் இன் சார்"

"எஸ் மது, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"சொல்லுங்க சார்"

"உன்ன நம்ம சென்னை ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன், ஆர் யூ ரெடி டூ கோ தேர்"

மதுமிதாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. நிஜமாகவே சென்னைக்கா? அதுவும் ரகுவோடு, வெல்லம் சாப்பிட கசக்குமா என்ன? ஐயோ ரகு ஐயம் கமிங் என்று அவள் மனம் துள்ளி குதித்தது.

"என்ன மது உனக்கு விருப்பம் இல்ல போல தெரியுது?"

"ச்ச ச்ச  ஐயம் சோ ஹாப்பி சார், எப்போ அங்க ஜாயின் பண்ணனும்"

"நெக்ஸ்ட் வீக்"

" ஓகே சார் பட் இப்போ திடீர்னு என்ன ஏன் டிரான்ஸ்பர் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"அதா நீ உன் பிரண்டு கிட்ட தான் மது கேட்கணும், ரியல்லி எ ஸ்வீட் பாய், யார் யாராவோ புடிச்சு எப்படியோ உன்ன சென்னை ஆபீஸ்க்கு மாத்திட்டான் பையன்"      

மெய் சிலிர்த்து போனாள் மது.ஒரு வார்த்தை சொல்லாத போதும் தன் மனதில் இருப்பதை அப்படியே புரிந்து நடக்கும் நண்பன் யாருக்கு தான் கிடைப்பான்? அவனும் தன்னை போலவே தன் அருகில் இருப்பதை விரும்புகிறான் என்று நினைத்த போது பெருமையில் முகம் மலர்ந்தது.

"இந்த டூ டயஸ் நம்ம அஷ்வினி உன் ஷோ பாத்துப்பாங்க, நீ சென்னைக்கு போய் பர்மாளிடிஸ் எல்லாம் முடிசுறு மது ஆள் தீ பெஸ்ட்"

"தேங்க்ஸ் சார், நான் கிளம்பறேன்"

"சரி மது"

வெளியே வந்து மேகாவிடம் விஷயத்தை கூறினாள்.கொஞ்சம் கவலை இருந்த போதும் அதை மறைத்து அவளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தாள். நேராக வீடிற்கு வந்தவள், ரகுவை பார்க்க எண்ணி அவன் வீட்டிற்க்குள் நுழைந்தாள். அங்கே கண்ட காட்சி அவளை அதிர்ச்சடைய செய்தது!!!

காதல் பெருகும்… 

Episode # 03

Episode # 05


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.