" ஓகே அடுத்த பாட்டு " ,, " இப்போ ஷக்தி - மித்ரா " , " புவனா - சஞ்சய் ",," நித்தி - கார்த்தி " ,, " ஆகாஷ் - சுப்ரியா "
இப்படியே அன்றைய இரவு ஆடலும் பாடலுடன் கலகலப்பாக முடிந்தது .. ....
மறுநாள் மிக பரபரப்பாக விடிந்தது அனைவரும் ..
" ம்ம்ம் சீக்கிரமா கிளம்புங்க அப்பு .. சீக்கிரம் சாமியை கும்பிட்டுடு தாலி செய்ய போகணும் " என்றபடி அனைவரையும் துரிதபடுத்தி கொண்டிருந்தார் பாட்டி ..
குடும்பத்தோடு அனைவரும் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழி பட்டனர் .
நாளை நடைபெற விருக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறி, மணமக்கள் நீண்ட ஆயுளோடும் செல்வத்தோடும் இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்ற வேண்டிக் கொண்டார் தத்தா ..
" அடுத்து எங்கப்பா ?? " - சூர்யா
" தாலி செய்யத்தான் "- தாத்தா ..
" ஏன் தாத்தா .,, கடையிலேயே வாங்கிருக்கலாமே .. இப்போ தாலி செய்ய லேட் ஆகாதா ? " என்று கேட்டாள் சுபத்ரா ..
" அதுக்கு வேற காரணம் இருக்கு பேத்தி "
" அதென்ன காரணம் பாட்டி ? " - மீரா
" தாயி, கடையில செஞ்சு விக்குற தாலி எல்லாருக்கும் பொதுவானது .. அந்த தாலியை செஞ்ச யாருக்கும் இது யாரு கழுத்துக்கு போகும்னு கூட தெரியாது ..ஆனா இப்போ பெரும்பாலும் அப்படிதானே அவசரமா கல்யாணம் நடக்குது ? பரம்பரை பரம்பரையா, தாலி சங்கிலி , நகைகள் செய்றதுக்குனு கொல்லன்கள் சில ஊரில் தான் இன்னும் இருக்காங்க .. நம்ம வீட்டுல சேர்ந்த்த தங்கம் எடுத்து அவங்க கிட்ட கொடுத்து , அவங்க தாலி செய்யும் போது பக்கத்திலிருந்து , அந்த தாலி உருவாகுற மாதிரி பல நுணுக்கங்களும் சுவாரஸ்யங்களும் இணைந்து உருவாகும் உங்க உறவு நல்லா இருக்கணும்னு சுத்தி உள்ளவங்க வேண்டிப்போம் .. தாலி உருவாக உருவாக சுத்தி உள்ள பெரியவங்க மனசு உருகி வேண்டுனா, அந்த ஆசியும் வேண்டுதலும் உங்க வாழ்க்கையை இன்னும் சிறப்பிச்சு வைக்கும் .. "
" ஒரு தாலியில் இவ்வளவு விஷயம் இருக்கா பாட்டி ? "
"ஆமா ஜானும்மா .. என்னதான் எங்க கல்யாணம் அதிரடியா நடந்தாலும், எங்களுக்கும் ஹ்டாளி பிரிச்சு போடுற சடங்கு வைக்கும்போது அத்தை தனியா தாலி செஞ்சாங்க " என்றார் அபிராமி ..
" ஹ்ம்ம் அது ஒரு காலம்ல அபி ? "என்று பெருமூச்சு விட்டு கண்சிமிட்டினார் சூர்யா ..
" சும்மா இருங்க பிள்ளைங்க எல்லாரும் பார்க்குறாங்க " என்று அழகாய் வெட்கபட்டவரை பார்த்து ரகுராம் , " அப்பா நீங்க பேசுங்க கண்ணாடிங்க .. நான் எதையும் பார்க்கலியே " என்று வாரினான் .. அதன்பின் குடும்பத்தோடு சேர்ந்து மூன்று பெண்களுக்கும் பொன்தாலி செய்துவிட்டு வீடு திரும்பினர் அனைவரும் ..
நாளை திருமணம்... திருமணத்திற்கே உரித்தாகிய வெட்கமும் களையும் போட்டியிட வீட்டி வளம் வந்தனர் பெண்கள் இருவரும் ..
" இதனால் தெரிவிப்பது என்னவென்றால், இப்போதிலிருந்து நாளை முகுர்த்த நேரம் வரை மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக்க கூடாது , வீட்டை விட்டு படிதாண்ட கூடாது என்பதை செம்ம குஷியாக தெரிவித்து கொள்கிறோம் " என்று தம்பட்டம் அடித்தாள் மித்ரா ..
" இவளுக்கு சந்தோஷத்தை பார்தியா ? " என்றாள் மீரா நித்யாவிடம்..
" பின்ன அவ ஷக்திகிட்ட விடுற ஜொள்ளை நாம பார்க்க மாட்டோம்னு நம்பிக்கைத்தான் " என்றாள் நித்யா ..
" சரி சரி ...மூணு பெரும் கை நீட்டுங்க .. மருதாணி வைக்கணும் " என்றாள் புவனா
" சாரி புவனா அக்கா .. எனக்கு அல்ரெடி மருதாணி வெச்சாச்சு " - சுபி ...
" அடடே .. இது எப்போ நடந்தது சுபி கண்ணு ?? " - சுப்ரியா ..
" ம்ம்ம்ம் நான் சொல்ல மாட்டேன் போங்க " என்று அழகாய் வெட்கப்பட்டாள் சுபத்ரா .. அதே நேரம் சென்னையில்,
" சுஜீ பால் வேணுமாடா ? "
" இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல் எனக்கு " மனைவியின் கோபமான குரலை கேட்டு ரகசியமாய் சிரித்துக் கொண்டான் ரவிராஜ் ..
" ப்ப்பாஆஅ என்ன கோவம் வருது என் செல்லத்துக்கு .. ஊரு முழுக்க, பேபிக்குள் ஒரு பேபின்னு கதை விடுறது .. அப்பறம் என்கிட்ட மட்டும் பெரிய மனுஷி மாதிரி கோபப்படுறது .. நல்லவேளை நான் அப்பாவி பையனா இருக்குறதுனால இவளின் கோபத்தை எல்லாம் சமாளிக்கிறேன் .. எனக்கு பதிலா பொன்னம்பலம், ராதாரவி, நிழல்கள்ரவி, ரகுவரன் ரேஞ்சுக்கு புருஷன் கிடைச்சிருந்தா என் செல்லம் இந்நேரம் என்ன ஆகி இருப்பாளோ ?? "
" அங்க என்ன சத்தம் "
" பேசிகிட்டு இருக்கேன் மா "
" யாருகூட "
" ம்ம்ம்கும்ம்ம் இதுக்காக நான் போயி அனிருத் கிட்ட கால்ஷீட் கேட்க முடியுமா ? என்கிட்டதான் .. "
" பேசுங்க பேசுங்க .. என் பேச்சை தான் கேட்கல .. உங்க பேச்சையாவது கேட்குறிங்களா பார்ப்போம் ? "
அதுவரை தனதறையில் இருந்தவன், மனைவியின் முன் ஸ்டைலாய் நின்று
: ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் " என்றான் .. சுஜாதாவோ கையில் கிடைத்த குட்டி தலையணையை அவன் மீது வீசினாள் ...
" ஓ காட் .. செல்லம் உனக்கு உண்மையிலேயே கோபம் வருது "
" யோவ் அப்போ நான் என்ன இவ்வளவு நேரம் டிராமாவா பண்ணுறேன் ??"
" என்னம்மா கோவம் உனக்கு ? "
" எனக்கு ஜானு ரகு பாஸ் கல்யாணத்துக்கு போகணும் ராஜ் " என்றவள் தனதருகில் அமர்ந்தவனின் சட்டை பட்டனை திருகி கொண்டிருந்தாள்...
" அதுக்கு ஏன் என் சட்டையை பிக்கிறே ?? "
" ப்ச்ச்ச் "
" புரிஞ்சுக்கோ பேபி .. உனக்கு எப்போ வேணும்னாலும் பெயின் வந்திரும் "
" இதெல்லாம் அநியாயம் பேபி ..அதான் டாக்டர் டேட் சொல்லி இருக்காருல .. அப்பறம் என்ன ? "
" புரிஞ்சிக்கோ கண்ணம்மா "
" ஹே இப்போ என்ன சொன்னிங்க ??"
" புரிஞ்சிக்கன்னு சொன்னேன் "
" அடடே ..அதுக்கு பிறகு ..."
" கண்ணம்மா நு சொன்னேன் "
" கிட்ட வாங்க .... "
" அடிக்க போறியா ? "
" ம்ம்ம்ஹ்ம்ம்ம் " என்றவள் அவனை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள் ...
" ஆஹா .. கண்ணம்மான்னு கூப்பிட்ட என் பொண்டாட்டிக்கு பிடிக்கும்னு தெரியும் ஆனா இவ்ளோ புடிக்கும்னு தெரியாதே .. "