(Reading time: 57 - 114 minutes)

சென்னையில் வந்து இறங்கியதும் சொன்னாள். “நம்ம மேரேஜை உங்க ஊர்லயே வைக்கலாம்...அப்பதான் அவங்களுக்கும் நல்லா படும்..”

“உன் இஷ்டம்.”

“இப்பவே பத்திரிக்கை கொடுக்கனும்....இன்னும் 15 டேஸ்ல வெட்டிங்...”

“சரி..”

ஏர்போர்டிலிருந்து நேராக இன்விடேஷன் ஷாப்.....ப்ரிண்ட் செய்த பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டுதான் மதுரை ஃப்ளைட்டில் போர்டானாள் மிர்னா. மதுரையில் இருந்த அம்மா வீட்டில் குளித்து கிளம்ப அரை மணி நேரம்.

“பத்திரிக்கை கொடுக்கிறதுக்கு நானும் அங்க வருவேன்...நாம ரெண்டு பேரும் இப்பவே போவோம்..”

“நீ எதுக்கு மினு...எதாவது சொல்வாங்க...”

அதுதான எனக்கும் வேணும் பி.கே...

“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போவீங்களா...?..” பரிதாபமாய் ஒரு பார்வை..

“சரி வா”

“எனக்காகத்தான் அன்னைக்கு நீங்கல்லாம் பேசுனீங்கன்னு புரியாம பேசிட்டேன்...அதான் கல்யாணத்தையே இங்க வைக்கிறோம்...எல்லோரும் வந்து நின்னு நடத்தி தரனும்...” மிர்னா ஊரில் இருந்த முக்கிய நபரின் வீட்டில் பேசிக்கொண்டிருக்க..

“ம் ..கல்யாணப் பொண்ணும் மாப்ளையும் சேர்ந்து வந்து பத்திரிக்கை கொடுக்கிறீங்களாங்கும்...?” ஒரு பாட்டி ஆரம்பித்தார்.

“அதான் ஏற்கனவே எங்களுக்கு கல்யாணம் நடந்துட்டே பாட்டி...” வியன் சமாளித்தான்.

“அது அந்த நாட்டுக்கு பாட்டிமா...நம்ம நாட்டுபடி இனிமதான்....இதுதான் எங்களுக்கு முக்கியம்........”

பாட்டிமா பிக் அப் ப்ண்ணுங்க பாட்டிமா...இல்லைனா என் ப்ளான் பணால் ஆகிடும்...

நம்ம நாட்டு முறைல செய்றதுன்னா முறையா செய்ங்க...பொண்ணு வீடுன்னு நம்ம ஜான்சன் வீடதான வச்சிருக்கீங்க...அங்க வைங்க பொண்ண...கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போ...அதுதான் நம்ம ஊர் முறை..மரியாதையும் கூட...”

பாட்டி ஆரம்பிக்க அடுத்த அரை மணி நேரத்தில் மிர்னா பேக்டு டூ ஜான்சன் வீடு. வியன் பாடு படு படு சூடு...

அடுத்த ஒரு மணி நேரத்தில் வியன் மிர்னா இருவரின் பெற்றோர் உடன் பிறந்தோர் அத்தனை பேரும் வந்து சேர திருவிழாவாய் ஆரம்பித்தது திருமணம்..

மொபைலில் மிர்னாவை அழைத்தான் வியன்...” எனக்கு நல்லா தெரியும் இது உன் ப்ளான்தான...?”

”ஸ்மார்ட் பாய் கரெக்டா கண்டு பிடிச்சுட்டியே...”

“நான் என்னடி செய்தேன் உன்னைய...ஒரே ரூம்ல ...முழு உரிமையோட இருந்தாலும்...ஒரு இம்மிகூட உன் இஷ்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யாமதான இருந்தேன்...என்னைப் போய் ப்ராப்ளம்னு கழற்றி விட்டுட்டியே...”

“நோ நோ இதை கரெக்டா தப்பா புரிஞ்சிகிட்டீங்க...எனக்கு நம்ம ஊர் ஸ்டைல்ல நச்சு பிச்சுன்னு ரொமாண்டிக்கா ஒரு மேரேஜ் வேணும்...என்னதான் பர்கர் சாப்டாலும் நம்ம கிராமத்து கோழிகொழம்புக்குன்னு ஒரு ருசி இருக்கதான செய்து...”

“நீ கோழி கொழம்பு சாப்ட ஆசைப் பட்டு என்னை கடுங்காப்பியில காயப்போடுறீயே....இது உனக்கே நல்லா இருக்குதா...?”

“டேஸ்ட் செய்து பாக்காமலே புலம்பாதீங்க பி.கே..”

“என் பொண்டாட்டிய  பார்க்கவிடாம என்னை படை போட்டு தடுத்துவச்சிருக்காங்க எங்க ஊர்காரங்க...பத்தாத பாக்கிக்கு எங்கப்பா வேற...நாங்கல்லாம் இப்டிதான்டா கல்யாணம் செய்தோம்னு டென்ஷனாக்கி விட்டுகிட்டு இருக்காங்க...”

“என்ஜாய்”

நாள் 2

“மினு இன்னைக்கு கல்யாண புடவை எடுக்க மதுரை போறாங்க...வராம மட்டும் இருந்திடாத...”

“நான் வருவேன் மாப்ஸ்.....நீங்க வர முடியுதான்னு பாருங்க...”

அவள் அங்கு ஷோ ரூம் வாசலில் இறங்கும் போது வியனைத் தவிர அனைவரும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆஜர்.

கடையில் மற்றவர்கள் சேலை தேர்வில் மும்முரமாக இருக்க, சற்று தள்ளிப் போய் போன் செய்தாள்...

“என்ன மாப்ளை சார் என்னை வர சொல்லிட்டு நீங்க மாட்டிகிட்டீங்க போல..?”

“.பக்கத்துல உள்ள கண்ணாடில உன் முகத்தைப் பாரு உனக்கே இது எவ்ளவு ஓவர்னு தெரியும்..”

அருகிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இவள் “கண்ணாடில பார்த்துகிட்டுதான் இருக்கேன்...ஒன்னும் ஓவரா இல்லையே...எல்லாம் அளவா..”

சட்டென அந்த கண்ணாடி கதவாக திறக்க, சட்டென உள்ளிழுத்தான் வியன்.

கண்ணாடி ட்ரையல் ரூம் கதவாயிருந்திருகிறது...உள்ளே அவன்..

“அச்சோ..யாராவது பார்த்திர போறாங்க...”

சட்டென கதவை மூடினான்.

“எவ்ளவு நேரமா உள்ளே உனக்காக வெயிட் செய்துட்டு இருக்கேன் தெரியுமா?”.

ஒரு கணம் அவனை ஆவலாய் பார்த்தவள் வாய்விட்டு சிரித்தாள்.

அவனுமே சிரித்துக் கொண்டுதான் இருந்தான்.

“சொன்னேன்ல இது கடுங்காப்பி இல்ல சிக்கன் குழம்பு...” கண்சிமிட்டினாள்.

“போடி...நீயும் உன் சிக்கனும்...மத்த நேரம் எல்லாம் இது கசப்பு காபி.”

“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசுறது கஸ்டமர் யார் காதுலயாவது விழுந்தாலே கஷ்டமா போயிடும்...”

வேரியை அலை பேசியில் அழைத்தான்.

“அண்ணிதான் வாசல்ல நிக்காங்க...முதல்ல நீ அவங்க கூட போ...அப்புறமா நான் வாரேன்...”

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மிர்னா.

அன்று இரவு அலைபேசியில் இதைப் பற்றி இருவரும் பேசி சிரித்தனர்.

நாள் 3

“ஹேய்...இன்னைக்கு அரிசிகூட்டம்னு எதோ செய்ய போறாங்களாம்.....எங்க சித்தப்பா பெரியப்பா முறைல உள்ள எல்லோரும் அரிசி கொண்டு வந்து இங்க எங்க வீட்ல சமைச்சு....விருந்து நடக்குமாம்..... “

“ஆமாம்...இந்த மட்டன் குழம்பு ரொம்ப நல்லா இருக்கும்....”

“உதபடப் போற...இப்போ அதுதான் முக்கியமா..? உங்க வீட்டை தவிர மொத்த ஊரும் இங்க இருக்குமாம்.....அங்க உங்க வீட்டுக்கு பின்னால ஒரு பூவரச மரம் இருக்குது பாரு அங்க வருவேன்...ஒழுங்கா வந்து சேர்....”

அடுத்த சில மணி நேரங்களில் பூவரசமரத்தின் அடியில் அவள்...

“ஹையோ......வேஷ்டி சட்டையில் அமர்களமா ஹீரோ மாதிரி இருக்கீங்க...அப்படியே ஒரு டூயட் பாடலாம் போல இருக்குது....”

வேஷ்டியோடு வெண் சட்டையில் பார்த்த உருவமா?

இது பிகே வின் கல்யாண கோல மாற்றமா?

“ஆனாலும் உனக்கு இவ்ளவு கொழுப்பு ஆகாது ...நானே  யாருக்கும் வித்யாசமா தெரிஞ்சிரக்கூடாதுன்னு இப்டி வந்தா..... “

“ஏய்...இவளே... அற்புதம்....அங்க யாரோ இளசுக தனியா நிக்ற மாதிரி தெரியுதே.... “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.