இந்து எதுவும் சொல்லாமல் கீதாவிடம் போனை கொடுத்தாள். கீதா அழைத்தது சஞ்சீவ் தான் என்பதை அறிந்தவுடன் எதுவும் சொல்லாது வீணாவை பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு, அவனுடைய நம்பரை கூப்பிட்டாள்.
"ஹலோ அண்ணி, சாரி டிஸ்டர்ப் பண்றேனா?"
"இல்லை சஞ்சீவ் சொல்லுங்க?"
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட தட்ட அதே நேரத்தில், அன்னையிடம் அன்று நடந்த எல்லா கதையையும் சொல்லி விட்டு தூங்க வந்தாள் இந்து. சஞ்சீவிடம் யாரென்று கேட்காமல் டெக்கரேஷன் பற்றி பேசியதை மட்டும் சொன்னாள்.
அன்னையிடம் பேசி முடிக்க நேரமாகி விட்டதால், இன்று வழக்கம் போல் புத்தகம் எதுவும் படிக்காமல் தூங்குவது என்று முடிவு செய்து விட்டு, விளக்கை அணைத்து விட்டு படுத்தாள். தூக்கம் கண்களை சொக்கியது. ஏனோ, சம்பந்தமே இல்லாது சஞ்சீவின் முகம் நினைவில் வந்தது... இவன் நினைவு ஏன் இப்போது வருகிறது என்று யோசித்தவள்.. பதில் கிடைக்கும் முன்னே தூங்கி போனாள்.
Situation Song:
Go to மனம் விரும்புதே உன்னை... Part 1
Go to மனம் விரும்புதே உன்னை... Part 3
தொடரும்
BTW, Please add your comments to make it more interactive .