யாருக்காக அழுகிறாள் என்று அவளுக்கே அவளின் மீது எரிச்சலாக வந்தது... அவளை ஒரு ஜட பொருளாக கூட மதிக்காத கணவனுக்காக அழுகிறாளா? இல்லை ஏதோ அவளை துன்புறுத்தி விட்ட வில்லியை போல் நடத்தும் அனாமிகாவிற்க்காக அழுகிறாளா? தெரியவில்லை....
ஊரில் அம்மாவின் கையால் வாங்கி சாப்பிட்ட நாட்களும், தம்பி தங்கையுடன் செலவிட்ட நேரங்களும் வேறு நினைவுக்கு வந்து அவளின் அழுகையை இன்னும் அதிகரித்தது...
கிட்டத்தட்ட முழு இரவையும் தூங்காமலே கழித்தாள்...
சுய இரக்கமும், பச்சாதாபமும் சேர்ந்து அவளை வாட்டின....
இப்போது தலையை பிளப்பது போல் வலித்தது.
“நான்ட்ஸ்...”
எஸ்-ஸின் குரல் கேட்டு திரும்பினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ய வேண்டி இருந்தது...”
“பில் விஷயத்தை சொல்லு...”
“இன்னுமா உனக்கு புரியலை...உன் வைஃப் alimony எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டா....”
“வாட்?”
“எனக்கும் கூட கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருந்தது... நானும் எடுத்து சொன்னேன்... ஆனால் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டா”
“ஓ!”