அன்றைய பகல் பொழுது முழுவதும் அனாமிகா நந்தினியின் நிழல் போல கூடவே இருந்தாள்... இருவருக்கும் பேச எத்தனையோ விஷயங்கள் இருந்தன...
நடுவில் நடந்த கசப்பான சம்பவங்கள் நடக்கவே இல்லை என்பது போல் இருவரும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தனர்...
அவர்கள் இருவரையும் பார்த்து பார்த்து எஸ்-சிற்கு மனதினுள் பொறாமை உணர்வு பொங்கியது...
பல்லைக் கடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான் அவன்...
இது மட்டும் போதாதென்று மாலையில் வள்ளியும் பெண்கள் கூட்டணியில் வந்து சேர்ந்துக் கொண்டாள்.
“என்ன நந்தினி எஸ்.கே எந்த வம்பும் செய்யாமல் இருக்கானா?”
“நாங்க இரண்டு பேரும் பேசவே நேரம் பத்தலை மேம்... அவரை பார்க்கவே இல்லை...”
பார்க்கவே இல்லையா!!!! ர ... எல்லோரும் உருகி வழிய? எனக்கு இப்போ உங்க்ளை பார்த்தாலே பிடிக்கலை... அப்படியே பத்திகிட்டு வருது... என்ன கேவலமான புத்தி உங்களுக்கு... ச்சே....” மூச்சு விடாமல் பேசி விட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி சென்றாள் நந்தினி.
எஸ் கன்னத்தை தடவியபடி அவள் போவதையே பார்த்தபடி நின்றிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...