சங்கரின் அருகாமை ஆதியை மெல்ல மெல்ல மாற்றிட வந்து சேர்ந்தான் சரண், முத்துவின் மகன், தன் மனைவி தன்னுடன் வாழ பிடிக்காமல், வேறு ஒருவனோடு தன் மீதி வாழ்வை வாழ சென்றுவிட, சொந்த மண்ணில் அந்த அவமானத்தோடு வாழ பிடிக்காமல் தன் ஊர்க்காரரான ரவிச்சந்திரனிடம் வந்து சேர்ந்தார் முத்து. அன்று முதல் முத்து ஆதிக்கும், சங்கருக்கும் கூட அப்பாவாக மாறிவிட, சகோதரம் கலந்த நட்போடு வளர்ந்தனர் மூவரும் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை யாருக்கும் தாயன்பு கிடைக்கவில்லை என்பது தான்.
சங்கர் விடுமுறை நாட்களில் கோயம்பத்தூர் சென்றுவிட, சரண் எப்போதும் ஆதியுடன் தான் இருப்பான், ஒரே வயது, ஒரே வகுப்பு, ஒருமித்த சிந்தனை அவர்கள் இருவரும் நகமும், சதையும் எனவே வளர்ந்தனர். சங்கர் மருத்துவ படிப்பை தேர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
center;">தொடரும்