தான் விட்ட சாபம் பலிக்கும் என்று தெரிந்திருந்தால்...., தன் உயிர் நண்பன் தன் கண் முன்னே துடிக்கும் காட்சியை காணப் போகும் பரிதாபாத் துயர் நிலை வரும்.... என்று அறிந்திருந்தால் சங்கர் தன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளை வெளிவிட்டிருக்க மாட்டான் தானே...வெளிவிட்ட வார்த்தைகளை இனி உள் வாங்க முடியாது .தான் ...சரி அவனா பேசியது,...அவனை பேச அல்லவோ வைத்தது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் , தன் வேலையை கனகச்சிதமாக முடித்த களிப்பில் அன்றைய பொழுது மறைய, இருள் மெல்ல சூழ தொடங்கியது.
சூழ்ந்த இருள் பெரும் போராட்டம் கொடுக்க போகிறதோ ..?.ஆம் என்றது காலம் ...சங்கர் வீட்டு காலிங் பெல்லை அழுத்த, கதவை திறந்தவள் ஆச்சர்யத்தில்
ஹாய் ப்ரோ ...வாட் எ சர்பிரைஸ் .....நீங்க வீட்டுக்கெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்க பொண்ணோட பிரசவத்துக்கு போயிருக்காங்க ...இங்க இருக்க எல்லாரும் அவன்ட்ட கடன் வாங்கினவங்க தான் ....இன்னும் ரெண்டு மணி நேரத்துல இங்க வருவானாம், அவன் சொல்ற படி நான் கேட்டா கடனே கட்ட . வேணாமாம் இல்லன்னா....பேச முடியாமல் மீண்டும் அழ
சரி அழாத, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம் வா ...