இல்ல சார், போலீஸ்ல சொன்னா நான் தான் அவன கூப்பிட்டு, என்ன தப்பான ....
ஐயோ ....போதும் மனோ... நீ செஞ்ச பயத்திய கார தனத்துக்கு,…. அப்பவே சொன்னேன் கேட்டியா, இப்பவாவது எங்க கூட வந்து இரு நான் பாத்துக்குறேன், முதல்ல கிளம்பு ....போட்டவை போட்டபடி இருக்க அவனுடன் சென்றுவிட்டாள் மனோ
உமாவை கண்டவுடன் அவளை கட்டிக்கொண்டு மீண்டும் அழுகை தொடங்க ...அழாதே மனோ ....நாங்க இருக்கோம் இல்ல ...எத்தன தடவ சொல்லியிருப்பேன் தனியா இருக்க வேணாம்னு, சரி விடு ஒன்னும் பிரச்சனை இல்ல நாங்க இருக்கோம், என்ன பிரச்சனை என்று கூட தெரிந்து கொள்ளாமல் உமா ஆதரவு வார்த்தைகள் கூறினாள்
நீ அவளுக்கு சூடா கொஞ்சம் பால கொடுத்து படுக்க வையேன் ..உமாவிடம் கூறிவிட்டு என்ன செய்ய என புரியாமல் தடுமாற
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்கான் செத்து போயிடல புரியுதா .....?
ஆழ் கடல் அமைதி……..மயான நிசப்தம்…..
இங்க பாரு மானு பொண்ணு பிரச்சனை இப்போ பணம் இல்ல…. இதோ பாரு எட்டு லட்சத்துக்கான செக், நேத்தே ஆதி என்ட்ட குடுத்துட்டான் ஆனா ...அதுக்கு பதிலா நீ ஒரு காரியம் பண்ணனும் ...
அவள் புரியாமல் முழிக்க ...