அன்று மாலை சீக்கிரம் வீடு திரும்பிய சிந்தனாவைக் கண்டதும் நந்தினிக்கு ஆச்சர்யம்தான். இரவு உணவுக்கு வர மறுத்துவிட்டாள்.
“எனக்கு தலை வலிக்குது நந்து. என்னை தொந்தரவு செய்யாதே.”
அவள் வராததை சுஜயா கண்டுகொள்ளவில்லை. விஸ்வநாதன் கேட்டபோது நந்தினி அவளுக்கு தலைவலி என்றதும் யோசனையானார்.
குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு நந்தினி தூங்க போனபோது கதவை தட்டும் ஒலி கேட்டு எழுந்தாள். கதவைத் திறந்ததும் அந்த பக்கம் சிந்தனா நின்றுகொண்டிருந்தாள்.
“என்ன சிந்து? தலைவலி பரவாயில்லையா? இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கியே? ஏதாவது வேணுமா?”
“நந்து நானும் உன் கூட படுத்துக்கவா? எனக்கு அம்மா அப்பா ஞாபகமா இருக்கு.”
ஏக்கமுடன் கேட்டவளை பரிதாபத்துடன் பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்னகைத்து கொண்டான்.
“நீங்க சாப்பிட்டீங்களா?” அவளின் கேள்வியில் அவனுக்கு கண்ணை கரித்தது.
இதே மாதிரி அக்கறை தொனிக்க கேட்க யாரும் இல்லை. சுயநலவாதிகள் என்று அவன் ஒதுக்கிவைத்த சொந்தத்திற்கு இப்போதும் அவன் கூட சேர ஆசைதான். அது இவனிடம் உள்ள வசதிக்காக. இவன் மேல் கொண்ட அக்கறைக்காக அல்ல.