"கடவுளை தாங்க நம்பிக்கிட்டு இருக்கேன்... எந்த பிரச்சினை வந்தாலும் எங்க நட்பு எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது... அதுபோதும்ங்க எனக்கு.."
"எல்லாமே நல்லபடியா நடக்கும் மதி.. நீ கவலைப்படாத... மணியாச்சு பாரு வா போய் படுப்போம்.."
மறுநாள் காலைப் பொழுது இனிமையாக விடிந்தது யுக்தாவிற்கு... 12 வருடம் கழித்து இன்று தான் பிருத்வியை பார்க்கப் போகிறாள்... அழகாக அவளை அலங்கரித்துக் கொண்டாள்.
கவி அலுவலகம் கிளம்பிவிட்டாள், அவள் அன்னையும் தந்தையும் தயாராகும் வரை காத்திருந்தாள் யுக்தா... இதயம் வேகமாக துடிப்பது போல் இருந்தது... உடம்பெல்லாம் சில்லிட்டு போனதுபோல் இருந்தது... பிருத்வியிடம் இவளுக்கு வரவேற்பு எப்படி இருக்கும்...
இவளைப் போலவே அவனும் இவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பானா...??? இல்லை சாதாரணமாக தான் இருப்பானா...?? ஒருவேளை இவளை அவன் மறந்திருந்தால்... ஏனோ அப்படி நினைக்கும் போதே... மனதில் ஒரு வலி ஏற்பட்டதுபோல் உணர்ந்தாள்...
என் இதயம் இதுவரை துடித்ததில்லை...
இப்போ துடிக்கிறதே...
என் மனசோ.. இதுவரை பறந்ததில்லை...
இப்போ பறக்கிறதே...
இது எதனால்... எதனால் தெரியவில்லை..
அதனால் பிடிக்கிறதே...
இது சுகமா... வலியா... தெரியவில்லை...
கொஞ்சம் சுகமும்.. கொஞ்சம் வலியும்...
சேர்ந்து துரத்துகிறதே...
இப்படி அவஸ்தைகளோடு பிருத்வியை காண சென்றாள் யுக்தா... அவன் அங்கு இருக்கப்போவதில்லை என்பதை அவள் அறிந்தாள்...
தொடரும்
{kunena_discuss:933}