அவன் வராமல் எங்கே போகப் போகிறான். அவனுக்கு இருக்கும் ஒரே வேளை, சந்தோஷம் எல்லாம் அனுவை பார்ப்பதுதான்.
அவனைப் பார்த்த மாத்திரத்தில் அனுவின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை. அந்தப் புன்னகை மறைவதற்குள் அவளின் மனம் அவளைத் திட்ட தொடங்கியது “என்னடீ ஆச்சி உனக்கு. நேத்து திபக் கால் பண்ணா எடுக்கலாமானு யோசிக்கிற, இப்போ என்னடானா அவன் வரவில்லை என்று அவனை திட்டுர?, அவனைப் பார்த்தவுடன் சிரிக்கிற?. தப்பு அனு பெரிய தப்பு பண்ற”.
அவள் அதை நினைத்து முடிப்பதற்குள் அவள் தோளில் கை போட்டவாறு வந்து நின்றாள் திவ்யா. “என்ன மச்சி அதிசயமா இருக்கு, இன்னைக்கு எனக்கு முன்னாடி வந்து நிக்குரே” நக்கலாக அனுவை சீண்டினாள் திவ்யா.
அவளிடம் எதுவும் கூறாமல் ஒரு சிறு புன்னகை மட்டும் செய்துவிட்டு மீண்டும் விஷ்ணு இருக்கும் திசையில் தன் தலையை திருப்பினாள் அனு.
“அங்க யாரடீ பாக்குர” என்று கூறியபடியே அனு தலையை திருப்பிய திசையில் தன் பார்த்த திவ்யாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
“எவ்வளவு சொன்னாலும் இவன் திருந்த மாட்டான் போல. இவனை இன்று ஒரு வழி பண்றேன் பார்” என்று வேகமாகக் கிளம்பியவளின் கையை பற்றி நிறுத்தினாள் அனு.
“திவி, அமைதியா இரு. பஸ்ல போகும் போது உனக்கு எல்லாம் சொல்றேன் இப்போ நீ பொறுமையா இரு” என்று தன் தோழியின் சமாதானம் செய்தாள்.
அனு செய்வது எதுவும் புரியாமல் அவளை முறைத்துப் பார்த்தாள் திவ்யா. அதற்கு அவள் ஆபிஸ் பஸ் வரவே இருவரும் ஏறினர்.
இங்கு நடப்பது அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. இவர்கள் பேசியது அவன் காதில் விழவில்லை என்றாலும் ஓரளவு இங்கு என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்திருந்தது.
அப்போது அவன் பாக்கெட்டில் இருந்த கை பேசி ஒலித்தது. எடுத்து யார் என்று பார்த்தான் “எமன்” என்று கை பேசியின் திரையில் வந்தது.
தொடரும் . . .
{kunena_discuss:906}