ஆக அன்று ஜெயா பாட்டியை முத்துவை விட்டு வேவு பார்த்ததை போல் அங்கு என்னையும் வேவு பார்த்துள்ளான் ...யாருக்கு தெரியும் இங்கு கூட என்னை வேவு பார்க்க என வேலைக்காரர்கள் யாரையாச்சும் வைத்திருப்பான் அவனுக்கு உண்மையில் என் மீது காதல் இருந்திருந்தால் என்னை காதலித்த அடுத்த நொடி வேவு பார்ப்பதை நிறுத்த சொல்லி இருப்பானே ....! அப்படியென்றால் என்னை உறவாடி கெடுத்து உள்ளான் ....என்னை ஏமாற்றி உள்ளான் ...மீண்டுமாய் அவன் மீது ஆழமான அவ நம்பிக்கை எழுந்தது அவளிடம்.
ஆக அவனுக்கு வேண்டியது அவன் குழந்தை மட்டும் தான் என்னிடம் பிரியமாய் இருப்பதை போல் பேசுவது அவன் குழந்தைக்காக மட்டும் தான் ..மீண்டும் நான் ஏமாந்துள்ளேன் ..ஒவ்வொரு முறையும் ஆதி விஷயத்தில் நான் ஏமாறுகிறேன்
என்னை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ே…. போய்விடுவேன் என்று தானே இன்றுவரை அவனுக்கு வாக்களித்து இருக்கிறேன் ...
மனதிற்கு எடுத்துரைத்தாள் மனோகரி….
பயன் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது அவனிடம் பாராமுகம், எதுவும் பேசவில்லை ...அவன் மேல் எரிச்சல், சிடு சிடுப்பு ..குதர்க்க பதில் . மீண்டும் .டீல் பற்றிய உரையாடல்….