(Reading time: 5 - 10 minutes)

று வருடங்களுக்குப் பிறகு, ஒரு கான்ஃபெரென்சிற்காக மதுரை வந்திருந்தான் மகத்…

“உங்களை இங்க பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு மகத்… உங்க எம்.எஸ் படிப்பு எப்படி போயிட்டிருக்கு?...” என அங்கிருந்த மருத்துவர் ஒருவர் கேட்க

“ரொம்ப நல்லா போயிட்டிருக்கு சார்…” என்றான் மகத்…

“ஹ்ம்… சாரி மகத்… உங்க படிப்புக்கு இடையில உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்…”

“இட்ஸ் ஓகே சார்… நானும் இங்க வந்ததால நிறைய கத்துக்கிட்டேன்… அதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்…”

“ஹ்ம்ம் ஓகே மகத்… ஒருவாரம் கான்ஃபெரென்ஸ் நடக்கும்… அந்த நேரம் போக, மத்த நேரம் கொஞ்சம் ஊரை சுத்திப் பாருங்க மகத்… உங்களுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்…”

“ஒகே சார்…” என்றபடி அவரிடமிருந்து விடைபெற்று நகர்ந்தவனுக்கு அடுத்து எங்கே செல்வது என்று தெரியவில்லை…

கான்ஃபெரென்ஸ் நடக்கும் ஹாலை விட்டு வெளியே வந்தவன், சற்று நேரம் காலாற நடந்தான் அங்கிருந்த சாலையில்…

அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வர, வெளியே இருந்தே அதன் கோபுரத்தை தரிசித்தவன், திரும்பியபோது, கீழே ஒரு புக் விழுந்து கிடந்தது…

“இது யாரோடது?...” என அவன் யோசித்தவன், சரி புக்கை பிரித்து பார்ப்போம்… பெயர் இருக்குமே என எண்ணமிட்டபடி புக்கை திறக்க முயலுகையில்,

“எக்ஸ்கியூஸ்மி…. நீங்க கையில வச்சிருக்குற புக் என்னோடது… கீழே விழுந்துட்டு…” என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்க,

தன் கையில் இருந்த புத்தகத்தோடு திரும்பியவனின் பார்வை அப்படியே நின்றது எதிரே நின்றவளிடத்தில்…

தொடரும்

Episode # 25

Episode # 27

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.