(Reading time: 18 - 35 minutes)

கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா, இந்த ஒரு கடிதத்தை முடித்து விட்டு கிளம்பலாம்' என்றாள்

அவன் தலையாட்டினான், பக்கத்திலிருந்த டேபிளின் சேரில் உட்கார்ந்தான்

'ஐயோ, இங்கே எதிரில் உட்காருங்கள், அங்கே சார் ஏதாவது சொல்லுவார்' என்றாள்

அவள் எதிரில் வந்து உட்கார்ந்தான், அவள் டைப் பண்ணுவதில் மூழ்கி விட்டாள், அதனால், வருபவர், போறவர்கள் என்று எல்லோரும் அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள், ஒரு பத்து நிமிஷத்தில் அவள்

GM கு போனில் விஷயத்தை சொன்னாள், 'சரி நீ போ, ருத்ரா எனக்கு காலையிலேயே சொல்லிட்டார்' என்று அவன் சொன்னவுடன் சிரித்துக் கொண்டே கிளம்பினாள்.

அவர்கள் இருவரும் வெளியே வரும் போது எல்லோரும் அவனை விஷ் பண்ணுவதைப் பார்த்து அவள் கேட்டாள் ' இங்கு எல்லோருக்கும் உங்களை நன்றாக தெரியும் போலிருக்கு,’

'ஆமாம், முதலாளிக்கு தெரிந்தவர் என்றால் சும்மாவா,'

'நீங்கள் அடிக்கடி வருவீர்களா?' என்று கேட்டாள்

'ஹ்ம்ம், வருவேன்' என்றான்

காருக்கு வந்தார்கள், அவளுக்கு கதவை திறந்துவிட்டான், அவள் உட்கார்ந்தவுடன், திரும்பி தன் சீட்டில் வந்து உட்கார்ந்து கிளப்பினான்

அவர்கள் வீடு வந்து சேர்ந்து, இருவரும் சாப்பிட சென்றனர், யாரும் கண்ணில் பட வில்லை, தாங்கள் உட்கார்ந்து ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டனர், அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், கற்பகம் வந்தாள், ‘நீங்க எப்போ வந்தீங்க?, இருங்க உங்களுக்கு என்ன வேணும் நான் கொண்டு வரேன்' என்று உள்ளே போகப் போனாள்,

'அம்மா, நாங்க முடித்து விட்டோம், நீ ஏன் கஷ்டப் படறே, நான் உன்னிடம் என்ன சொன்னேன் நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன் இல்லியா,சரி வித்யா எங்கே?’ என்று கேட்டான், “அவள் தன் பிலவுசுக்கு, ஏதோ வொர்க் செய்யறாள்' என்று சொன்னவுடன் அவர்கள் இருவரும் சிரித்தனர், கூடவே கற்பகமும் சிரித்தாள்

இருவரும் எழுந்தனர், அவன் தட்டை எடுக்கப் போகும்போது, சித்ரா அவன் கையை தள்ளி விட்டு, அவள் அந்தத் தட்டையும் எடுத்துப் போனாள், அதை கற்பகமும் பார்த்தாள், மனதிற்குள், இவர்கள் இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

தன் அம்மா, அவனையே பார்பதைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது

சித்ரா கை அலம்பி வந்து, ' நீங்க இன்னுமா கை அலம்ப வில்லை, தட்டிலேயே அலம்பியிருக்கலாம் இல்லை, இருங்க நான் தண்ணி கொண்டுவரேன்,’ என்றாள்'

‘ஹேய், இரு, நானே போறேன், நான் என்ன சின்னக் குழந்தையா, தண்ணிக் கொண்டு வந்து கை கழுவி விட,' என்று ஒரு பார்வைப் பார்த்துவிட்டு போனான்

அந்தப் பார்வைக்கு அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை,

வன் தன் ரூமுக்குச் சென்றான், தலை வலிப்பதுப் போல் இருந்தது அப்படியே படுத்தான்,

கொஞ்ச நேரத்தில் யாரோ கதவைத் திறப்பதுப் போல் இருந்தது, யாரென்று திரும்பிப் பார்த்தான், சித்ரா தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள், ' என்ன சித்ரா?' என்று கேட்டான்

'இல்லை நீங்க கீழே இறங்கி வரவில்லையே?' என்று பார்க்க வந்தேன்

'கொஞ்சம் தலைவலி, அதான், கீழே வரவில்லை' என்றான்  

'தலை வலியா, ஏன் சொல்லவில்லை சூடா காபி போட்டுக் கொண்டுவரவா,' என்று கேட்டாள்

கிட்டே வந்து அவன் தலையை பிடித்துக் கொண்டே கேட்டாள்

அவள் கைப் பட்டவுடன் அவன் உடம்பில் மாற்றம் தெரிந்தது, அவள் கை பட்டுப் போல அவ்வளவு மிருதுவாக இருந்தது, அவள் கையைப் பிடித்தான் அதை இழுத்து ஒரு முத்தம் கொடுத்தான், ' தலை வலி என்று சொன்னீங்க'

'ம், சொன்னேன், உன் கை பட்டவுடன், எல்லாம் போய்விட்டது, இப்போது வேறு வலி வந்து விட்டது, '

'அப்படியா என்ன வலி அது?' என்று ரகசியமாகக் கேட்டாள்

'இரு சொல்றேன்! ' என்று அவள் மடியில் தன் தலையை வைத்து கொண்டான், அவள் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள்

அவன் தன்னை மறந்தான், அவளும் தன்னை மறந்தாள், அவன் கைகளை அவள் இடுப்பை சுற்றி அனைத்துக் கொண்டான், அவன் கையால் அவளை லேசாக தடவினான், அவள் தன்னை முழுவதும் மறந்தாள், தன்னை இழந்தாள், அவன் இன்னும் தன்னை ஆட்கொள்வானா என்று அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது, அவனும் கள்வெறி கொண்டவன் போல் அவள் அழகில் மயங்கினான், அவள் ஒவ்வொரு அணுவிலும் அழகு, அதை மிகவும் ரசித்தான், அவன் ரசிப்பதை அவளுக்கு உணர்த்தினான், முணுமுணுத்தான், ‘நீ எப்பவும் எனக்கு வேண்டும் சித்ரா,’ என்று அவள் அவனுடைய ஆளுகையை வெகுவாக ரசித்தாள், இன்னும், இன்னும் அவன் வேண்டும் தனக்கு இப்படியே இவனுடன் காலமெல்லாம் இவன் தொடுகையில் இருக்கவேண்டும் என்று உணர்ந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.