20. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
சுஜயாவிற்கு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். இருந்தும் அவளுக்கு மனநிம்மதி இல்லை. பாக்கியம் இறந்தபிறகு சரஸ்வதியும் அவளிடம் இருந்து விலகிவிட்டாள். பேசும் போதும் முகம் கொடுத்து பேசாமல் யாரையோ பார்த்து பேசுவது போல் நடந்துகொண்டதுதான் அவளால் தாங்க முடியாததாய் இருந்தது. சுஜயா திருமணமும் செய்து கொள்ளமாட்டேன், வேறு ஊருக்கும் படிக்க போகமாட்டேன் என்ற கோபத்தில் சிந்தனாவின் மறுப்பையும் கதறலையும் பொருட்படுத்தாது அவளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். வீட்டின் வெறுமை கொன்றது.
சூர்யா தனது கணவனோடு வரும்போது சுஜயாவிற்கு வேறு வேலைகள் காத்திருக்கும். அம்மாவின் மனதை ஏதோ கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ூர்யா படுக்கையில் கிடக்கவில்லை. சிரித்த முகமாகவே வரவேற்றாள்.
“வாங்கப்பா! வா சுஜா. நல்லாருக்கீங்களா?”
“என்ன அக்கா? நாங்க வரோம்னு சொன்ன உடனே உன் ஜூரம் ஓடிப்போயிடுச்சா?” கிண்டல் குரலில் கேட்டாள்.
“ஜூரம் எல்லாம் இல்லே. உன்னை வரவைக்க நான் சொன்ன பொய்தான்.”
“ஏங்க்கா!”