கலகலப்புடன் மதிய உணவு முடிந்தது. தன் தந்தையுடன் கிளம்பிவிட்டாள். அவள் தங்காததற்கு தன் வருத்தத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டான். அவனும் வேலை இருக்கிறது என்று சென்றுவிட்டான். சுஜயாவுக்கு தன் தந்தையுடன் செல்ல மனம் வரவில்லை. அவளுக்கு வசீகரன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று வேகம் வந்தது. பேருந்து நிறுத்தம் வரையிலும் தந்தை கூட வந்தவள் தயங்கி நின்றாள்.
“என்னம்மா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
“எனக்கு அக்காவை விட்டுட்டு வர முடியலைப்பா. நான் இரண்டு நாள் அக்கா கூட இருந்துட்டு வரவாப்பா?”
அவர் சிரித்தார்.
“இதுக்கு ஏன்டா தயங்கறே? நான்தான் உன்னை தங்கிட்டு வரச்சொன்னேனே. உனக்கும் மனசுக்கு கொஞ்சம் தெளிவா இருக்கும்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
“ஆக! இவர் மனசில் இப்படி ஒரு எண்ணம் இருக்கா? எப்பயிருந்து? இது தெரியாமல் இவரிடம் பழகியிருக்கேனே.” தன்னை நொந்துகொண்டாள். கண்டிப்பாக கொஞ்ச நாட்கள் போனால் அக்காவே இந்த முடிவை சொன்னாலும் சொல்வாள். மாமா சொல்ல வைப்பார்.
அவளுக்கு ஒரு நாள் சரஸ்வதி வசீகரனுடன் பேசியது நினைவில் வந்தது.