“அப்பதான் நீங்க வந்தீங்க என்னைப் பார்க்கன்னு…” இந்த அவளது குரல் எரி நெருப்பில் இருந்து இளம் தென்றலாய் இனம் மாற……அவள் எதையும் சொல்லும் முன்பே அவள் இதயத்தில் இவன் இடம் எது என தெளிவாகவே புரிகிறது இவனுக்கு…
“ஏனோ உங்கள பார்த்தப்பவே ஒரு சமாதானம்…ஏன்னு சொல்லத் தெரியலை ஒரு நல்ல ஃபீல்….ஒரு நிம்மதி…..உங்கள எனக்கு பிடிச்சுது…..அதுல இருந்தே ரெண்டு மனசாதான் என் நிலமை…..
நீரா கூட அவ ஹஸ்பண்டை பிடிச்சிருக்குன்னு சொல்லித்தான் கல்யாணம் செய்தா…..
ஒரு பக்கம் உங்களை வேண்டாம்னு சொல்லனும்னு இருக்கும்….இன்னொரு பக்கம் நான் அப்டி சொல்றது உங்களை ஹர்ட் பண்ணிறக் கூடாதுன்னும் இருக்கும்….இதுல உங்களைப் பார்த்தா வேண்டாம்னு சொல்லனும்னு நினச்சதே மறந்து கூடப் போகும்…..
அப்பாட்ட அவங்க விருப்பத்துக்கு மறுப்பு சொல்றது எனக்கு கஷ்டம்தான்….. அதுக்காக நிச்சயம் செய்றதுன்ற அளவு நிலமை வந்த பிறகெல்லாம் சரின்னு தலையாட்டிட்டுப் போக என்னால முடியாது……மத்த யாரா இருந்தாலும் எனக்கு இஷ்டமில்லைனு அந்த இடத்துல நிச்சயம் சொல்லிருப்பேன்…
ஆனா உங்க விஷயத்துல என் அறிவுக்கும் மனசுக்கும் இடையில ஆயிரம் போராட்டம்….மனசுக்காக வீட்ல வச்சு சரின்னு சொல்லிட்டு….அறிவோட குடச்சலை சமாளிக்கிறதுக்காக உங்க பண்ணய மாட்டுப் பண்ணனு நினைச்சு… கல்யாணத்தை நிறுத்த ப்ளான் போட்டேன்”
தன் கவ் பிக்னிக் ப்ளானை சொல்லி முடித்தாள் நிலவினி… கணவன் மனைவி இருவர் முகத்திலுமே சிரிப்பு வந்துருந்தது இப்போது….
“கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறவ செய்ற ப்ளானா அது….? இந்த கல்யாணம் நிக்றதுல என் அப்பாவோ யவ்வனோ அவங்க வீட்லயோ யாருமோ மனசு கஷ்டப்பட்டுறக் கூடாது…..நான் கல்யாணத்தை நிறுத்த ட்ரைப் பண்ணலைனும் இருந்துடக் கூடாதுன்னு……ஆயிரம் நொண்டிச் சமாதானம் என் அறிவுக்கு நான் சொல்லிக்கிட்டாலும்….அடி மனசுல நம்ம மேரேஜ் நடக்கனும்ன்ற ஆசைதான் எனக்கு…. இதுல அப்பப்ப நீரா ஞாபகம் வர்றப்பல்லாம் மனசு தாங்காம ஒரு தவிப்பு வேற….அப்பதான் நீங்க இப்டி ஃபோட்டோ அனுப்பி இருந்தீங்க…”
அந்த ஃபோடோவை முதலில் அவள் பார்த்த விதத்தை விளக்க….ஏதோ சொல்ல ஆரம்பித்த யவ்வன் அடுத்து அவளே பேசட்டும் என அவளைப் பார்த்தபடி மௌனமாகிக் கொண்டான்.
தொடரும்!
{kunena_discuss:929}