(Reading time: 20 - 40 minutes)

வன் விளக்க, தங்கள் கார் முன்னால் செல்லும் பைக்கை நிமிர்ந்து பார்த்த நிலவினியின் மனம் நிறைந்துதான் போகிறது.

உடன் பிறந்தவர் இன்றி வளர்ந்தவளல்லவா……இந்த சகோதர பாசம் நெஞ்சம் தொடத்தான் செய்கிறது… கூடவே பவிக்கு இதைவிட ஒரு நல்ல குடும்பத்தை அவளது தந்தை தேடிவிட முடியாத என்ற எண்ணமும் ஓடுகிறது இவளுள்….

வினியைப் பொறுத்தவரை அபயன் வகையில் முதலிலிருந்தே சற்று நல்ல எண்ணம்தான்….ஆனால் பவியின் அப்பா மாப்பிள்ளையை மட்டுமாய் பார்த்து பெண் தரமாட்டாரே…. அதோடு அவர் முன்ன பின்ன எதுவும் முரண்டு பண்ணினாலும் அண்ணன் தம்பி ஒருத்தர்க்கு ஒருத்தர் கண்டிப்பா சப்போர்ட் பண்ணி எப்படியும் சம்மதிக்க வச்சுடுவாங்க….யாரும் யாரையும் விட்டுத்தர மாதிரி தெரியலை…

இன்னொரு முக்கிய விஷயம் இத்தன நேரம் தேடி திக் திக்குனு வந்தவங்களுக்கு…..இவங்க இப்டி சொல்லாம கொள்ளாம ஊர் சுத்திட்டு வர்றாங்கன்னு தெரிஞ்சதும் எரிச்சலாதான வரும்….ஆன இந்த  சூழலிலும் இவள் மனத எதுவும் வருத்திடக் கூடாதுன்னு எத்தனையா யோசிச்சுப் பேசுறாங்க…. அது அவர்களது சுபாவத்தின் வெளிப்பாடு… யவ்வனின் மேலுள்ள பிரியத்தை தானே இவளிடம் இப்படி காண்பிக்றாங்க….அதில் இவளுக்கு பரம சந்தோஷமே….

அப்படின்னா பவி மீதுள்ள பிரியத்தை  பவி குடும்பத்தின் மீதும் அபயன் காண்பிப்பான்தானே…..இவ வீடு மாதிரி பவி வீடும் ஆண் வாரிசில்லாத குடும்பம்…..பவியோட தங்கைக்கு பொறுப்பா நின்னு எல்லாம் பவி அப்பாவே பார்த்துடுவாங்கனாலும்….வயசான காலத்துல பவி அம்மா அப்பாவ பார்த்துக்கிட பவிக்கு பெர்மிஷன் இருக்கனுமே… அந்த விஷயத்துல நிச்சயமா அபயன நம்பலாம்….   சூழ்நிலை பிடிக்குதோ இல்லையோ அபயன் பவி வீட்டை பார்த்துகாம விட்டுடமாட்டாங்கதான்….

பவி விஷயத்தை குறித்து சற்று நிம்மதி வருகிறது இவளுள்….. ‘எப்டியும் இந்த கல்யாணம் ப்ரச்சனை இல்லாம நடக்கனும்…’

அடுத்து தன் மாமியாருக்கு அழைத்தாள். “என்னடா நள்ளவனே” (இரண்டாம் மகனை அழைக்கும் முறை) என ஆரம்பித்த அவர்

இவளது “அத்த நான் வினி பேசுறேன்” னில் “கட்டிப் பிள்ள நீயா….” என்ற பதத்திற்குப் போய்….”உன்ட்ட பேசுன பிறகுதான் திருப்தியா இருக்குமா…. பார்த்து வாங்க என்னமா…. அப்டியே அம்மாவுக்கும் ஒரு தடவை பேசிடுமா…..அங்க கூப்ட வேண்டாம்னுதான் நினைச்சோம்……ஆனாலும் ரொம்பவும் லேட்டாகவும் மனசு கேட்கலை……இப்ப தேவையில்லாம எல்லோருக்கும் வருத்தம்…..தப்பா எடுத்துகாதமா” என்றார். அவர் குரலில் இருந்த உணர்வுகளை முதன் முறையாக கவனித்தாள் நிலவினி.

ஒரு குடும்பத்தின் முதல் மருமகளா இருக்றது கொஞ்சம் வித்யாசமான ரோல் போல என தோன்றத் தொடங்கியது அவளுக்கு. மருமகளை கையாள்வது அவர்களுக்கும் புது அனுபவம்….அவர்களை கையாள்வது இவளுக்கும் புது அனுபவம்….

அடுத்து அம்மாட்ட பேசி சமாதானம் செய்து……. இவர்கள் கொண்டல்புரம் வீட்டை அடையும் போது இயல்பான வார்த்தைகளை தவிர யாரும் எதுவும் பேசவில்லை…. இருகரையில் நடந்த ஃபன்ங்ஷன் பத்தி கொஞ்ச நேரம் பேசிவிட்டு எல்லோரும் கலைந்து செல்ல…. இவளை கை பிடித்து தன்னோடு தன் அறைக்கு கூட்டிப் போனார் மாமியார் மரகதம்.

“உங்க மாமா குடும்பத்துல பெண் வாரிசுன்றது ரொம்ப அபூர்வம்மா….எங்களுக்கோ ரொம்ப காலமா பிள்ளையே கிடையாது….இதுல பெண் குழந்தைங்கிறது கனவு மாதிரிதான்…..அப்றம் அதிசயத்திலும் அதிசயமா வரிசையா இவங்க மூனு பேர்..……அப்ப இருந்து வீட்டுக்கு வர்ற மருமகள்கதான் எங்களுக்கான பெண் குழந்தைங்கன்னு ரொம்பவே காத்திருந்துட்டேன்…..அவ்ளவு ஆசை….

அதி விஷயம் யவி சொல்லிருப்பான்ல….அது அப்டியாகவும்…. மருமகளா கூட எனக்குன்னு ஒரு பெண் குழந்தை என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு இருக்கோன்னு கூட தோணிட்டு …..ரொம்பவும் ஆசைப்பட்டதால அது கிடைக்க கூடாதுன்னு இருக்கோன்னு ஒரு நினப்பு…. யோசிச்சுப் பார்த்தா முட்டாள்தனமான சிந்தனை தான்….ஆனாலும் அப்டி ஒரு பதட்டம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருக்கு போல…..

அதான் நீங்க பைக்ல போய்ட்டு இவ்ளவு நேரமா வரலைனதும்….அந்த ரோடு வேற சரி கிடையாதா அது எப்டியோ எனக்கு பதறிட்டு…..மத்தபடி உன் அம்மா வீட்டுக்கோ இல்ல யவி கூடயோ நீ வெளிய போனது பிடிக்கலைனு நினச்சுடாதம்மா….என் வீட்டுக்குள்ள இப்பதான் முத முதல்ல ஒரு பொண்ண ஆண்டவர் அனுமதிச்சிறுக்காரு……நீ சந்தோஷமா இருந்தாதான் எனக்கும் சந்தோஷம்…..” இவள் கைகளை பற்றியபடி அவர் சொல்ல….

எல்லையில்லா ஆனந்தம் இவளுள்…..இவள் பயந்ததற்கும் இப்பொழுது இவளுக்கு வந்து அமைந்திருக்கும் வாழ்க்கைக்கும்…..நினைக்கவே நிம்மதி பாலாறும் சந்தோஷ தேனாறும் தித்தித்தது சிந்தையுள்ளே

கூடவே பவி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இங்கிருந்து எந்த  எதிர்ப்பும் இருக்காது என்பதும் உறுதியாக புரிய மனம் பொங்கி வழிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.