(Reading time: 23 - 46 minutes)

வ்வளவுதான் , நான் சொல்ல வந்தது முடிந்தது , என்பது போல பேச்சை நிறுத்தி கொண்டாள்  அவள் .. இருவரிடம் தலையாட்டி விட்டு காரில் இருந்து  இறங்கியவள் , ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கிளம்பினாள் .. ஷக்தி அவளுக்காக  ஏற்பாடு செய்த சர்ப்ரைஸ் அப்படியே இருக்கட்டும் என்று எண்ணியவள் , வழக்கம் போல  அவனை பற்றி நினைக்க தொடங்க , மற்ற பிரச்சனை எல்லாம் தூரமாய் சென்று விட்டது போல இருந்தது .. இதழில் மென்னகை பொருத்தி தன்னவனை பற்றி சிந்திக்க தொடங்கினாள்  , அவனின் மனைவி !

முகில்மதியின்  கைகளை பற்றி ஆறுதல் கூற முனைந்தான் அன்பெழிலன் .. அவனின் கையை உதறி விட்டவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள் .. " இதுக்குத்தான் சொன்னேன் எதுவும் வேணாம்னு .. நான் கேட்டேனா ? என் லைப்ல காதல் வேணும்னு ? எதுக்கு எழில் என் மேல பாசம் காட்டுனிங்க  ? எதுக்கு எனக்காக வைட் பண்ணிங்க ? இப்போ நான்தான் குற்றவாளி ஆகிட்டேன் " என்று அழுதாள்  அவள் ..

" முகிலா ... நீ அழறத நிறுத்து .. ! ஒன்னும் இல்லாதத பெருசு பண்ணாத ப்ளீஸ் "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

" எது பெருசு இல்லை ? எல்லாரும் உங்க அப்பா அம்மா மாதிரி இருக்க மாட்டாங்க எழில் .. இனி என்னென்ன நடக்க போகுதோ தெரியல "

" ஹே என்னடி உன் குடும்பம் என் குடும்பம்னு பிரிச்சு பேசிட்டு இருக்க ? எப்போ உன்ன லவ் பண்ணேனோ , அப்பவே அது என் குடும்பம் தான் .. உனக்கென்ன, யாரும் உன்னை குற்றம் சொல்லிட கூடாது அவ்வளவு தானே ? அதை நான் பார்த்துக்குறேன் ... தயவு செஞ்சு ஏதோ கொலைகாரனை காதலிச்ச மாதிரி பில்டப் கொடுத்து என்னை கொல்லாத .. சரியா ? எப்போ பார்த்தாலும் ஏன் தான் காதலிச்சேன்ன புலம்பிட்டு இருக்குறதே வேலைய போச்சு .. எனக்கே என்னமோ ,உன்னைய கட்டாயப்படுத்தி காதலிக்க வெச்ச மாதிரி தோணுது .. "  என்றான் அன்பெழிலன் ..அவன் சொல்வதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல அழுது கொண்டே இருந்தாள்  முகில்மதி ..

" ஈஸ்வரா , அம்மா தாயே கொஞ்சம் அழறதை நிறுத்தி எனக்கு தலை வலிக்கிறது ?"

" உங்களுக்கு என்ன வலி வந்தது ? எல்லா வலியும்  எனக்குத்தான் .. என்னை நம்பினவங்க முதுகுல குத்திட்டேன் நான் .. ஷக்தி அண்ணாகிட்ட நான் என்னனு சொல்லுவேன் ? கண்டிப்பா அவர் என்னை வெறுத்துடுவார் " என்று அவள்  அழவும் கோபத்தில் ஸ்டியரிங்கை குத்தினான் எழில் .. இதுவரை அவனது கோபத்தை அதிகம் கண்டிராதவள் அதிர்ச்சியாய்  முறைக்க ,

" அம்மா தாயே , அப்படி கஷ்டபட்டு நீ என்னை காதலிக்கவே வேணாம் .. நானும் உங்கண்ணன் கிட்ட எதுவும் பேசல .. உன்ன உங்கண்ணா கடையில இறக்கி விட்டுட்டு நான் வண்டிய கட்டுறேன் .. நீயும் உன் குடும்பமும் சந்தோஷமாய் இருங்க " என்றான் எழில் .. அவனை தடுத்து பேச வேண்டியவளோ , " இவனும் தன்னை புரிந்துகொள்ளவில்லை " என்ற  முடிவுடன் அமைதியானாள் .. அதை கண்டவனோ  " போகாதே ன்னு ஒரு வார்த்தை சொல்லுறாளா ? அழுததம் ..அப்படியே அவங்க அண்ணன் மாதிரி .. காதலிச்சவங்களை  அலைய விடுறதே வேலையா போச்சு " என்று பொருமியப்படி  காரை கிளப்பினான் .. இப்படியாய் தான் இருவருக்கும் நடுவில் விரிசல் மீண்டும் உண்டானது ..

எழில் எவ்வளவோ மறுத்தும் , அவனை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல தயாரானான் ஷக்தி ..அதே நேரம்கதிரை போனில் அழைத்தான் ..

" டேய் கதிர் "

" சொல்லுண்ணா  "

" வீட்டுக்கு வா டா இன்னைக்கு "

" என்ன திடீர்னு ? "

" சும்மா , நானும் மிதுவும் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வைக்கலாம்னு நெனைச்சேன் "

" எங்களுக்கா ? வேற யாரெல்லாம் வராங்க ?"

" மதி, அன்பு வந்திருக்காங்க டா .. அப்பறம் மதியண்ணா , நிலாவுக்கு கொஞ்சம் வேலை இருக்காம் .. மே  பீ நைட் வருவாங்க .. காவியா அப்பறம் நீ !"

" ஓ  தர்ஷினியும் வராளா  ?" என்று கதிர் கேட்க அவன் குரலில் மாற்றத்தை உணர்ந்தான் ஷக்தி .

" தெரியல ..இனிதான் கூப்பிடனும் ..ஏன் வர மாட்டாளா ?"

" அ ....அப்படி ஒன்னும் இல்லைண்ணா , கொஞ்சம் பிசியா இருந்தாள்  அதனால்தான் கேக்குறேன் " என்று சமாளித்தான் கதிர் ..

" நான் போன்  பண்ணி கேட்டுக்குறேன் " என்று போனை வைத்தவன் , காவியாவை வீட்டிற்கு அழைக்க , காவியா  " ட்ரை பண்ணுறேன் ஷக்தி " என்று போனை வைத்தாள்  .. அவள் பதிலை தெரிந்து கொள்வதற்காக கதிரேசன் அவளின் மேஜை அருகே நடக்க , போனை வைத்தவளோ தனது பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தாள்.. அவள் அருகில் இருந்த மற்றவர்கள் எல்லாம்

" வீ வில் மிஸ் யூ கவி " என்று கூற கதிருக்கு தூக்கி வாரி போட்டது .. அவனையும் மீறி அவனது கண்கள் , மேஜையை ஆராய , அவளின் பொருட்கள் எல்லாமே ஒரு பெட்டியில் அடுக்கபட்டு இருந்தது .. " வேலையை விட்டு போறாளா  தர்ஷினி ?" என்று திடுக்கிட்டவன் , அதே திகைப்பில் எதிரில் வந்த ரிஷியை மோதினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.