(Reading time: 16 - 31 minutes)

ருத்ரா தன் அம்மாவை அனைத்து, அவனும், அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான், கற்பகத்துக்கு ஆச்சர்யம்,

சித்ரா, 'ரூப் நான் வரணுமா, இல்லை நீயே தனியா போய் கொள்கிறாயா,'

'மாம், இங்கிருக்கிற ரூமுக்கு நீ எதுக்கு பட் நான் டாட் ரூமை ஒரு முறை பார்க்கலாமா ப்ளீஸ்,' என்றான்

'நாளைக்கு, மார்னிங் வந்து பாரு, இப்போ நீ டயர்ட், போய் குளிச்சு வேறே டிரஸ் மாத்தி படு,' என்றாள்

'ஓகே மாம் குட் நைட்!' என்று போய் விட்டான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

வள் தங்கள் ரூமினுள் நுழைந்தாள், ருத்ரா குளிப்பதுக்கு ரெடியானான், அவள் உள்ளே நுழைந்தவுடன் அவன் நின்றிருக்கும் கோலத்தை பார்த்து, ஏன் நாம் இப்போது உள்ளே வந்தோம் பேசாம, ரூபோட ரூமுக்கே போயிருக்கலாம், என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் கிட்டே வந்து அவளை இழுத்துக் கட்டிக் கொண்டான், ' நீங்கள் குளித்து விட்டு வாங்க, நான் ரூப்பை, கவனித்து விட்டு வருகிறேன், ' என்றாள், அவளுக்கே அவள் குரல், எங்கோ கிணத்துக் குள்ளிருந்து வருகிற மாதிரி இருந்தது, அவன் அவளை தூக்கிக் கொண்டு போய், கட்டிலில் படுக்க வைத்து, அவளின் உடையை களைந்து, 'நான் குளிக்க வேண்டும்,'  ' ம்ம், நானும் தான், ரெண்டு பேரும், ஒண்ணா குளிக்கலாம், கொஞ்ச நேரம் என்னோடு ஒத்துழை, ப்ளீஸ்,’

அவள் வாயை திறக்கவில்லை, அவள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள், அவனோடு இந்த அருகாமைக்காகத்தான், ஏங்கிக் கொண்டிருந்தோம், என்று நினைத்த மாத்திரத்தில் அவன், உணர்ச்சி மிகுதியில், ‘சித்து, என் கண்ணம்மா,’ என்று அனத்திக் கொண்டிருக்கையில் அவளும் அவனை இறுக்கி கட்டிக் கொண்டு அவனுக்கு ஒத்துழைத்தாள், இருவரும் குளித்து விட்டு வந்து படுத்தனர், அவன் அவளை இழுத்து தன், கை அணைப்பில் வைத்துக் கொண்டு, 'உன்னை பதினோரு வருஷத்துக்கு முன் பார்த்தபோது எப்படி இருந்தாயோ, அப்படியே இருக்கிறாய், உன்னை பார்த்தால் யாரும், பத்து வயது பையனுக்கு அம்மா என்றே சொல்ல மாட்டார்கள்,' என்றான்

அதே, இளமை, இனிமை,' என்றான்,

'நீங்க மட்டும் என்னவாம், இன்னும் இளமையாக இருக்கிறீர்கள்,' என்றாள்

'நீ சொன்ன இந்த வார்த்தை என்னை இன்னும் இளமையாக தோன்றுகிறது,' என்று அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, ‘தூங்கலாம் என் கண்ணம்மா,’ என்று அவள் காதில் சொல்லி, அவன் தூங்கிவிட்டான்,

ரண்டு நாள் கழித்து, அவர்கள், பெங்களூரு, கிளம்பினார்கள், ' கற்பகமும், சிவகாமியும், எதுக்குடா, அவளையும், குழந்தையையும் விட்டு விட்டு போ,' என்றார்கள், ருத்ராவிடம்,

'அவதாம்மா, முக்கியம், எல்லாம் செட் பண்ணிட்டு, நம்ம ரூப் ஸ்கூலில் போய் TC  வாங்கிக் கொண்டு வந்து விடுவோம், அதனால் கவலைப் படாதே, நாங்கள் ஹனி மூன் போயிருக்கோம் என்று நினைத்துக் கொள்,' என்று கூறி சமாதானப் படுத்தினான்,

அவர்கள் கிளம்பினார்கள், எல்லோரிடம் சொல்லிக் கொண்டு பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி வாங்கிக் கொண்டு, காரில் ஏறினார்கள், ரூப்புக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டாள்,

ஐந்து மணி நேரத்தில், பெங்களூரு போய் சேர்ந்தார்கள், நேரே ஹோட்டலுக்கு தான் போனார்கள், அங்கேயே சாப்பிடலாம் என்று, அங்கே சரோஜ் இருந்தாள், முதலில் சித்ராவும், ரூப்பும், உள்ளே போனார்கள், அவர்களை பார்த்த, சரோஜ் , ‘என்ன உன் புருஷன் வரவில்லையா,' என்று கேட்டாள்,

'வந்திருக்கிறார், இதோ அவரே வந்து விட்டார்,’ என்று அறிமுகம் செய்து வைத்தாள்

பாஷை தெரியாததால், ருத்ரா வெறுமே தலையை ஆட்டி விட்டு,உள்ளே போய், ஒரு டேபிளில்  உட்கார்ந்தான், அதற்குள், சித்ரா, ரிஜிஸ்டரில் வந்து, சரோஜிடம் பேசினாள், 'நான் கிளம்பட்டுமா நீ பார்த்துக் கொள்கிறாயா,' என்று கேட்டாள், சரோஜ்

'நீ சாப்பிட்டாச்சா சரோஜ், என்று கேட்டாள்,

'நான் சாப்பிட்டு விட்டேன், '

'நான்போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன், உன்னோடு பேசவேண்டும்,'  என்றாள், சித்ரா

'சரி, ' என்று  சொல்லி தன் வேலையில் கவனம் செலுத்தினாள்,

'சித்ராவும், ருத்ராவும், பேசிக் கொண்டே சாப்பிட்டனர், நடு, நடுவில், ரூபேஷுடனும், பேசிக் கொண்டிருந்தான் , அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், ருத்ரா, ஹோட்டல் சர்வரிடம் பில் கொண்டு வரச் சொன்னான், அவன் சித்ராவைப் பார்க்கவும்.' என்ன பண்றீங்க, இதை, நான் பார்த்துக்க மாட்டேனா,' என்று அவள் கேட்க, அவன் தீர்கமான ஒரு பார்வையை பார்த்தான்,அவள் வேறொன்றும் பேசவில்லை, அந்த சர்வரிடம் பில் கொண்டு வரச் சொன்னாள்,'

அந்த பில் வந்ததும், அவன் அதற்கு உரிய பணத்தை கொடுத்தான், அவன் டிப் வைக்கப்  போனதைப் பார்த்து, 'இல்லை நம்ம ஹோட்டலில் டிப்ஸ் கூடாது,' என்றாள்

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், சரோஜுக்கு, போன் செய்து அவளை தன் ரூமில் வந்து பார்க்குமாறு சொன்னாள், அப்படியே ராகவேந்தரையும் வரச் சொன்னாள், ரூப்பை, ‘காஷில் போய் நீ இரு’ என்று அனுப்பி வைத்தாள்,

Episode # 21

Episode # 23

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்!

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.