(Reading time: 14 - 27 minutes)

ன் வயிற்றுக்

கத கதப்பில்

கருவறைக்குள்

சுகமாக நீந்திக்

கொண்டிருந்தாய் நீ ..

வார்த்தைகள் அற்ற

பரவசத்தினில் நான்..!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இரண்டே

அங்குலம் தான்

இருப்பாய் என்றார்கள் ..

ஆனால் அதற்குள்ளே

எத்தனை ஆக்ரமிப்பு

எனக்குள்ளே நீ..!!

கனவுகளில் கண்ட

உன் முகத்தை

கணிப்பொறி காட்டிய

கணம் அழியாத

புகை படமாய்

கைகளில் ஒன்றாக ..

என் நினைவுகளில்

ஆயிரங்களாக ..!

அவ்வப் பொழுது

தலை சுற்றல் ..

எப்பொழுதும் வருவது

வாந்தி மயக்கம் ..

உடல் களைத்திட்டாலும்

உள்ளம் மகிழ்கிறதே..

என்னில் நீ

இருக்கிறாயோ

அல்லது உன்னில்

நானிருக்கிறேனோ

என்று என்னை நான்

கேட்கின்றபோது

நம்மில் நாமிருக்கிறோம்

என்று செல்லமாய்

கூறி வயிற்றுக்குள்

எட்டி உதைக்கிறாய் நீ..

உன்னிடம்

உதை படுவதும்

சுகமாய் தான்

இருக்கிறது எனக்கு..!

நூலகம் நுழைந்து நான்

தேடுவதெல்லாம் ,

“காட்டுக்குள்ளே திருவிழா”

“வன தேவதையும்..

விறகு வெட்டியும் ” .. தான்

“பாட்டி வடை சுட்ட

படக் கதை”- யும்

தவறுவதில்லை..

கூடவே பிடிபடாத

கணக்குப் பாடத்தை

சிரத்தையுடன்

செய்கின்றேன்..

அம்மாவின் ஐக்யூ தான்

குட்டி பாப்பாவிற்கும்

வந்து விடுமென்று

சொன்னதினால்

வந்த பயம்..!!

காத்திருப்பு

என்றுமே சுகமாய்

இருந்ததில்லை ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.