(Reading time: 14 - 27 minutes)

னால் இப்பொழுது

இருக்கிறதே

வெகு பரவசமாய்..

இன்னமும் ஏழு

மாதங்கள்

இருக்கிறதாம்..

முழு நிலவாய்

உன்னை மண்ணில்

நான் காண்பதற்கு ..!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

என் கருவறையின்

கத கதப்பில்

இதயத்தின்

தாலாட்டில்

சுகமாகத் திரியும்

உன்னை நிரந்தரமாய்

சிறையில் தள்ள

காத்திருகின்றேன் நான் ..!

பயந்து விடாதே ..

இது அன்பெனும்

கம்பிகள் கொண்ட

நம் குடும்பமெனும்

பாச(அ)றை ..!

இதற்குள் என்றைக்கும்

பிணைக் கைதிகளாய்

நானும் உன் அப்பாவும் ..

விரைவில் நீயும் …!

இருப்பாய் தானே..?

நீ இருப்பாய்

என்கின்ற

நம்பிக்கை தான்

எங்கள் வாழ்வாதாரம்..!!

அன்னையின் கருவுக்குள்ளே

வேதங்களே கற்றிடுமாம்

சிறு குழந்தை ..

நீ பெண்ணியலா

கல்லாமல் இருந்திடுவாய்..

என் விருப்பு நான் மறந்து

உன் வளர்வில்

மனம் நிறைகின்றேன்..

எனக்கென்ற கனவுகள்

இருந்தது ஒரு காலம்..

நிஜமென நீ இருக்கையில்

கனவுகளும் நீயாய் போனாய் ..!

ஒவ்வொரு மாதமும்

வளர்வது

நீ மட்டுமல்ல ..

உன்னுடன் நானும் ..

உன் அப்பாவும் தான்..!

கூடவே சில சிரமங்களும்..

நிஜங்களையும்

நீ அறிந்திடவே

நான் இதனை கூறுகின்றேன்..

உன் வாழ்கை

தேன் கிண்ணமாய்

தித்திப்புடன் மட்டுமே

என்றென்றும் இருக்கும்

ஓயாமல் உழைக்கும்

தேனீக்களாய் நானும்

அப்பாவும் இருக்கும்வரை..!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.