திடீரென்று ஒருநாள் வீட்டில் கலகலப்பு மீண்டது. விஜயசேகரன் விடுமுறைக்காக வந்திருக்கிறான். ஏனோ அவளுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் அவளே நேரில் சென்று அவனை சந்திக்க தயக்கமாய் இருந்தது.
பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை முடிந்து திரும்பவும் பள்ளிக்கூடம் திறந்துவிட்டார்கள். அவர்கள் இல்லையென்றாலும் அவள் மாடியறைக்கு சென்றுவிடுவாள். பிள்ளைகளுக்கு தேவையானதை அவள் பார்த்து பார்த்து செய்ததால் அவர்கள் அவளிடம் மிகுந்த அன்பு காட்டினர். எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிரியமானவளாக இருந்தாள்.
இந்த நேரத்தில் வசந்தி பெரிய மனுசியாக அவளுக்குத் தைரியம் சொல்லி அவளுடன் நேரம் கழித்தது அன்புதான். தனக்கு என்னவோ பெரிதாக நேர்ந்துவிட்டது என்று பயந்திருந்த வசந்தி அன்புவின் வழிகாட்டலில
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சிந்தனா மீது கோபம் கொண்டாள்.
சிந்தனா லாவகமாய் கார் ஓட்டுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மனதில் தைரியம் இருந்தால்தான் தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். தனது சிறுவயதிலேயே தனது தைரியத்தை ஒடித்துப்போட்டுவிட்ட பெற்றோரின் மீது கோபம் வந்தது.