எப்போதும் அவர்கள் வீடு ஒன்று மயான அமைதியாய் இருக்கும். இல்லை சந்தைக்கடை போன்று ஒரே சத்தமாய் இருக்கும். சிந்தனா அவளது அமைதியைக் கலைக்க விரும்பவில்லை. அவள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று அவளுக்குப் புரிந்தது.
“சுருதி! என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கே. வீடு வந்துருச்சு. கீழே இறங்கு.”
சரியாக தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்த அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“என்ன ஆச்சர்யமாக பார்க்கிறே? உனது முகமே சொல்லுமே. நீ சமூக சேவகி தேன்மொழியோட பொண்ணுன்னு.”
அதைக் கேட்ட அவளது உதட்டில் கசந்த முறுவலொன்று உதித்தது.
‘சமூக சேவகியாம். பெரிய சமூக சேவகி. வீட்டில் குழந்தைகளை தவிக்க வைத்துவிட்டு இவள் என்ன சமூகத்தை வாழ வைத்துவிட போகிறாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க நேர்ந்த சிந்தனாவின் முகத்தை எப்படி பார்க்கப் போகிறோம் என்று வருந்தினாள்.
அவளது முகத்தைப் பார்த்த போது இந்த மாதிரி பேச்சுக்களை அவளது வாழ்க்கையில் கேட்டே இருக்கமாட்டாள் என்று புரிந்தது.
ஆறுதலுக்காக அவள் சிந்தனாவின் கைகளைப் பற்ற அவளோ அவளுக்கு ஆறுதலாய் கைகளை அழுத்திக்கொடுத்தாள்.