Page 5 of 5
தன்னை தேன்மொழி திட்டியதை மறைத்து அவள் சுருதியிடம் நடந்துகொண்டதை மட்டும் சொன்னாள்.
“இதனால்தாம்மா சுருதி வீட்டுக்குப் போகவே தயங்கினா. அதான் அவ நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதும் அவளை தனியா விட தயங்கிக்கிட்டு இங்கே அழைச்சுட்டு வந்தேன்.” தயக்கமாக தன்னிலை விளக்கம் சொன்னவளை அணைத்துக்கொண்டாள் அன்பரசி.
“எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா சிந்து? நீ செஞ்சது சரிதான். நீ அவளை விட்டுட்டு வந்திருந்தா நானே கோபப்பட்டிருப்பேன்.”
“சரிம்மா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன். குட்நைட்.”
“குட்நைட் டா செல்லம்.”
மகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அன்பரசி.
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}