“நான் வர்றேன் சுருதி.”
“நீ கொஞ்சம் நேரம் நில்லு சிந்து.”
அவளை நிறுத்தியவள் தாயிடம் திரும்பினாள்.
“அம்மா! சிந்துக்கிட்ட சாரி சொல்லு.”
அதைக் கேட்ட தேன்மொழி அதிர்ந்து நின்றாள்.
“என்ன சொன்னே? இவகிட்ட சாரி சொல்லனுமா?” அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ஆமாம்!” அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“ஏய்! சுருதி! உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? என்னைப் பார்த்து... அதுவும் இவகிட்ட..?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...உங்களுக்கு அவ்வளவு சந்தேகமா? நான்தான் பத்திரமா வந்தர்றேன்னு சொன்னேன்ல.”
வலிய வரவழைத்த புன்னகையுடன் பேசும் மகளை யோசனையுடன் பார்த்தாள் அன்பரசி. மகள் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது.
“அங்கே எதுவும் பிரச்சினையில்லையே?” நேரடியாக அவள் கேட்டுவிடவும் சிந்தனாவால் மறைக்க முடியவில்லை.