(Reading time: 17 - 33 minutes)

ன்றிரவு...

பயங்கர மழை!!!

வீட்டிற்கு நனைந்தப்படியே வந்தான் ராகுல்.

கதவை தட்டினான்...

சில நொடிகளில் கதவு திறந்தது...

நிமிர்ந்து தீக்ஷாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.அவள் அமைதியாக அவள் உள்ளே வர அனுமதித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அமைதியாக உள்ளே சென்றவள் அவன் தலை துவட்ட டவல் ஒன்றை எடுத்து வந்து தந்தாள்.

"அப்பா சாப்பிட்டாரா?"

"சாப்பிட்டு தூங்கிட்டார்!"

"நீ சாப்பிட்டியா?"-அவள் சட்டென நிமிர்ந்தாள்.திருமணமாகி இத்தனை நாட்களில் இவ்வளவு அக்கறையாக அவன் விசாரித்தது இல்லை.

"இல்லை...உங்களுக்காக..காத்திருந்தேன்!"-அவன் புன்னகைத்தான்.

"எனக்காக நிறைய விஷயத்துல காத்திருக்க போல!"

"ம்??"

"ஒண்ணுமில்லை..சாப்பாடு எடுத்து வை!குளிச்சிட்டு வரேன்!"-என்று தனதறைக்கு ஓடினான் ராகுல்.என்றும் இல்லாத திருநாளாய் மாறுப்பட்ட அவனது நடவடிக்கைகள் அவள் புத்திக்கு எட்டவில்லை.

குளித்துவிட்டு வந்தவனுக்கு உணவை பரிமாறினாள் அவன் சதி.

"நீயும் உட்காரு!"

"இல்லை..நீங்க சாப்பிடுங்க!"

"டைம் என்னன்னு பாரு..!ஒழுங்கா சாப்பிடு!"-என்று அவளது கரத்தை பற்றி அமர லைத்தான் ராகுல்.

தயங்கியப்படி அவனருகே அமர்ந்தவள்,குழம்பியப்படி உண்ண ஆரம்பித்தாள்.

ஏதோ புதியதாய் தெரிந்தது அவளுக்கு!அவனோ ஏதும் அறியாதவன் போல உணவிலே கவனம் பதித்தான்.

சாப்பிட்டு முடித்தவன்,ஒன்றும் பேசாமல் மாடிக்கு சென்றான்.

அவன் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை தவழ்ந்தது.

சில்லென்ற காற்று அவனது முகத்தில் உரச,அந்த தனிமை அவனது காதலை கொஞ்சம் கொஞ்சமாக விழிப்படைய செய்தது.அவன் எண்ணம் போலவே பத்து நிமிடத்தில் நேரம் போவதை அவனுக்கு உணர்த்த அவளும் வந்து சேர்ந்தாள்.

"என்னங்க இந்தாங்க பால்!"

"ம்...டேபிள் மேல வை!"-என்றான் நிலவையே பார்த்தப்படி,மழை மெல்லிய தூரல் போட்டு கொண்டிருந்தது.

"குளிர்ல நிற்காதீங்க!உடம்பு சரியில்லாம போக போகுது!"

"பார்த்துக்க தான் நீ இருக்கியே!"-சட்டென வந்தது அவனது பதில்!!

அவள் கேள்வியாய் அவனை பார்க்க,

"என்ன பார்த்துக்க மாட்டியா?"-என்றான் இரு கரங்களையும் குறுக்கே கட்டி அவளை பார்த்தப்படி....!!

"சதி!நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்பேன் செய்வியா?"

"என்ன?"

"லவ்வை எப்படி ப்ரபோஸ் பண்றது சதி?"-எதிர்பாராத கேள்வியை அவன் தொடுக்க திடுக்கிட்டாள் அவள்.

"எ..எனக்கு தெரியாது!"-அவள் நகர பார்க்க,வேகமாய் அவள் கரத்தை பற்றி தடுத்தான் ராகுல்.அவனது அந்த தீண்டலில் செயலிழந்து போனாள் தீக்ஷா.

"பொய் சொல்ற பார்த்தியா?நீ யார்கிட்டயும் இதுவரை ப்ரபோஸ் பண்ணதில்லை?"-எந்த அர்த்தத்தில் கேட்கிறான் இவன்??என்றவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தன..

"என்ன பேசுறீங்க நீங்க?"

"நான் ஒண்ணும் தப்பா கேட்கலையே!"

"வேற என்ன சரியா கேட்கிறீங்களா?நீங்க கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம் தெரியுமா?"

"நீ ஒருத்தனை லவ் பண்றன்னு அர்த்தம்!"

"ஸ்டாப் இட் ராகுல்!"-மனவேதனையின் உச்சத்தில் கத்தினாள் அவள்.

"என்னை பற்றி இந்த எண்ணத்தை தான் மனசுல வளர்த்து வைத்திருக்கீங்களா?நான் என்ன அவ்வளவு கேவலமானவளா?என்னிக்காவது ஒருநாள் என்னை புரிந்துக்கொள்வீங்கன்னு நினைத்தேன்!இல்லை...நான் தான் தப்பு கணக்கு போட்டுட்டேன்!நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை...அதை தெரிந்துக்கோங்க!"-அவள் நகர,

"அப்போ அன்னிக்கு என்னை காதலிக்கிறேன்னு சொன்னது பொய்யா?"என்றான் ராகுல்.

"என்ன?"

"அன்னிக்கு குடிச்சிட்டு என் சட்டையை பிடித்து நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னியே அது பொய்யா?"-தீர்க்கமாக கேட்டான் அவன்.ஒன்றும் புரியாமல் அவள் விழிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.