"யாரோ ஒருத்தன்னு சொன்னா யாரோ ஒருத்தனா?ஏன் அந்த யாரோ ஒருத்தன் நானாக மாட்டேனா?"-அவள் அதிர்ச்சியோடு அவன் முகத்தையே பார்த்தாள்.
"சரி சதி...நான் ஒத்துக்கிறேன்!எனக்கு ப்ரபோஸ் பண்ண தெரியலை...ஐ லவ் யூ!"-என்றான் வெளிப்படையாக!!!
நடந்த நிகழ்வுகளில் அதிர்ந்து போயிருந்தவள் அவனது காதலின் பகிங்கர வெளிபாடில் அதிர்ச்சியின் உச்சத்தை தொட்டாள்.
"எனக்கும் உன்னை ஆரம்பத்துல இருந்து பிடிக்கும் தான் !!எனக்கு கொஞ்சம் ஈகோ அதான் சொல்லலை...ஆனா,நீயும் சாதாரண ஆள் இல்லை..மனசுல அவ்வளவு காதலை வைத்துக்கிட்டு மூச்சுவிட்டியா நீ??இப்போதும் நானா தைரியத்தை வரவழைத்து சொல்லணும்ல!"-அவன் மேலும் கூறிக்கொண்டே போக அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது.அவனது காதல் வெளிவந்த உணர்வே அவள் காதலுக்கு வாகை சூட்டியது.எதையும் சிந்திக்காமல் அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள் தீக்ஷா.
அவன் சிறு புன்னகையோடு அவளை வளைத்துக்கொண்டான்.
"ஸாரி சதி!உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்!"-அவளது விசும்பல் பலமாக கேட்க அவனது பிடி இறுகியது.
"அழாதே..!!என்னால நீ அழுதது போதும்!இனி..வேணாம்!"-என்று அவள் கண்களை துடைத்தான் ராகுல்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...
படிக்க தவறாதீர்கள்...
நீண்ட நேரமாய் அடுத்து என்ன பேசலாம் என்று புரியாமல் நின்றனர் இருவரும்!!!
அடுத்த அவன் என்ன நினைத்தானோ,மெல்ல அவளது நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.
முதல்முறையாக அவனது காதலின் தீண்டல் அவளது தைரியத்தை உடைத்தெறிந்து நாணம் கொள்ள வைத்தது.தீக்ஷா தனது முகத்தை திருப்பிக்கொள்ள,அவன் விடாப்பிடியாக அவளது முகத்தை தன் பக்கமாக திருப்பி அவள் கண்களை உற்று பார்த்தாள்.அரை நிமிடங்கள் கூட அவனது பார்வையை அவளால் தாங்க முடியாமல் தலைக்குனிந்தாள் அவள்.இரு கரங்களாலும் மலரை போல் அவளை ஏந்தியவன்,தங்களின் அறைக்கு நடக்கலானான்.
காதல்...
காதலைக் குறித்த எண்ணங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேறுப்பட்டவை!!
சிலருக்கு காதல் தெய்வீகம்.சிலருக்கு அது பொழுதுபோக்கு.சிலருக்கோ அது பொய்யாகும்!!
உண்மையில் காதல் என்பது அன்பின் பரிணாம வளர்ச்சி மட்டும் அல்ல...அது உண்மையின் ஆணிவேராகும்!!இறைவன் படைப்பினில் காரணமில்லாதது,அவசியமில்லாதது ஒன்று உண்டா??அன்புக்கொண்ட நெஞ்சத்தில் பொய்யின் வாழ்வு நிலைக்காது!!தனது காதலை பொய்யாக்கிய ஒருவரால் காதலே
பொய்யாகிப்போகாது!!
காதலை ஆயுதமாக்கி ஆற்றப்படும் துரோகம் அவசியம் தாங்கிக்கொள்ள இயலாத பெருந்துன்பத்தை அப்பணி ஆற்றியவர்க்கு நல்க காத்திருக்கிறது!!அதேசமயம்,காதலை ஆயுதமாக்கி நிகழ்த்தப்படும் போராட்டம் அவசியம் வாழ்வனைத்தும் அக்காதலை தனதாக்கிய இருநெஞ்சங்களுக்காக தன்னையே இழந்து இன்பம் சேர்த்துக் கொண்டிருக்கும்.காதல் வாழ்வதற்காக!வீழ்த்த அல்ல!!
மறுநாள் சூரியோதயம்...
தலை கேசத்தை துவட்டியப்படி வந்தாள் தீக்ஷா.ராகுல் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.அவனை பார்த்ததும் முகம் சிவந்து போனது அவளுக்கு!!
நிலைக்கண்ணாடியின் முன் நின்றவள் கேசத்தை பூத்துவாலால் கட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டிட்டு குங்குமம் வைத்து கொண்டாள்.
கண்ணாடி வழியே ராகுலிடமிருந்து அசைவு தென்பட்டது.
மெல்ல கண்விழித்தவன் திருதிருவென விழித்தான்.
மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
தீக்ஷா எழுந்து சென்று திரைச்சீலையை விலக்கினாள்.சூரியயொளி ராகுலின் முகத்தில் மோதியது.
"ம்...கண்ணு கூசுது!"-சிணுங்கினான் அவன்.
"நேரமாயிடுச்சு எழுந்திரிங்க!"
"போ!"-என்று போர்வையை இழுத்து மூடினான்.ஒரு புன்னகையோடு போர்வையை இழுத்தாள் தீக்ஷா.அவள் இழுப்பதற்குள் அவளை இழுத்துக்கொண்டான் ராகுல்.
"ஐயோ!என்ன நீங்க?விடுங்க!!"
"ஐ லவ் யூ சதி!"-அவள் புன்னகையோடு அவன் மேல் சாய்ந்துக்கொண்டாள்.
"உனக்கு ரொம்ப கஷ்டம் தந்துட்டேன் ஸாரி!"-தீக்ஷா அவனது இதழ்களில் தனது சுட்டுவிரலை வைத்தாள்.
"உஷ்!இனி நமக்குள்ள எந்த கசப்பான விஷயத்துக்கு இடமில்லை!"-காலை நேரம் சுட்டெரிக்கும் ஆதவ வெப்பம் அவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.அவன் தனது சதியின் அன்பினில் மெல்ல மெல்ல சரணடைந்துக் கொண்டிருந்தான்...