03. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

டேய் விச்சு... என்று அவள் கரம் பற்ற அந்த விச்சுவின் கண்களோ நீங்காது வீட்டில் இருந்து புதியவளிடம் இருந்து.
டேய்... மச்சி.... நான் இங்க இருக்கும் போது அங்க யாரை பார்க்கற எனக்கு தெரியாம...' என்று சித்ரா அவன் கையில் ஒரு குத்து விட்டாள் செல்லமாய்!
திரும்பி அவன் பார்த்திருந்த புதியவளை பாரத்தாள் சித்ரா.. சிநேகமாய் ஒரு புன்னகை ஒன்று சிந்த புதியவளும் சுதாரித்து புன்னகைத்தாள்.
ஹாய்... நான் சித்ர நவிரா... ' என்று கை கொடுக்க
ஹாய் சித்ரா! நான் ப்ரீத்தி ஷ்ரவந்திகா... தாமரை பாட்டியோட ப்ரண்ட் அலமூவோட பேத்தி நான். அவங்க தான் பாட்டி அண்ட் அவங்க என் அம்மா காயத்ரி!' அவளும் பதிலுக்கு கையை நீட்டி குலுக்கினாள்.
ஓ... நைஸ்... நான் லோட்டஸோட முதல் மகனோட பெண்...' என்றாள் சித்ரா.
ஹம் தெரியும்... நீங்க உள்ளே நுழையும் போதே அறிமுக படலம் முடிச்சிட்டாங்க கயல்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...
படிக்க தவறாதீர்கள்...
ஹே டார்லிங்.. நான் இங்க நிக்கும் போது உனக்கு என்ன அங்க பேச்சு.... யாரு உன் முன்னாடி இருந்தாலும் நான் தானே ப்ரையாரிட்டி... ' என்றான் விச்சு குறும்பு பார்வையுடன்.
ப்ரீத்திக்கு அவன் யாரை கூறுகிறான் என்று குழம்பி போய் பார்த்தாள்.
இப்போது கொஞ்ச நாழி முன்ன தான் என்னை இப்படி கொஞ்சினான்.. இப்போ என்டானா... இதோ இங்க நிக்கற இந்த பொண்ணை கொஞ்சின்டு இருக்கறான்... ' என்றது ப்ரீத்தியின் மைண்ட் வாய்ஸ்.
டேய் மச்சி... என்னடா திடீர்னு இப்புடி ஒரு வார்த்தையை சொல்லிட்ட?? - இது சித்ரா
என்ன டார்லிங் நீ வரனு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல மாட்டியா நீ? என் செல்லத்தை நானே வந்து பிக்கப் செய்திருப்பேனே! - விஷ்வா
திரும்பவும் டபுள் மீணிங்க்! டேய் விஷ்வா...! அப்போ நான் யாருடா உனக்கு?'
யாரு?? நீ வந்து என்னை கூப்பட்டாலும்...அப்படியே சொன்னவுடனே முதல் வேலையா அத தான் நீ செய்ய போற! போடா டேய்!! உன்னை நம்பினா அவ்வளவு தான். என் கண்ணு முன்னாடியே ஊர்ல இருக்க அத்தனை பொண்ணுங்ககிட்டவும் அசராம கடலை போடுவ! யாரு நீ வந்து பிக்கப் செய்வியா?? அதனால தான் நான் வரேனு முன்னாடியே அண்ணாகிட்ட சொன்னேனே...
அய்யோ இந்த பொண்ணு அவனை பத்தி பிட்டு பிட்டு வைக்குதே?? இவன் எதுக்கு இங்க வந்தான்??
ஹே... அவர்கிட்ட சொன்னா... அவர் தான் முக்கியமா ??? நான் முக்கியம் இல்லையா???
டேய் என்னடா?? காலைலியே ஒரே அன்புத்தொல்லையா இருக்கு? நான் வேற நீ வேறையாடா?? நான் வருவேன்னு உனக்கு இன்டியூஷன் இருந்திருக்கனுமே டா??
ஆமா வேற வேறஇல்லை தான்! நாம ரெண்டு பேரும் இன்னோருத்தருல சரி பாதி தானே! நீ பாதி... நான் பாதி கண்ணே!!!' என்றான் கண்சிமிட்டி தோளோடு அணைத்தபடி.
ப்ரீத்தியின் மனம் இப்போது ஏக்ஸ்ட்ரீம் பாயிலிங்க் பாயிண்டில் இருந்தது. கொதித்து வார்த்தை எப்போது கொட்டும் என்று இருந்தது. அப்போ நான் டைம் பாசாடா உனக்கு?? மவனே நீ காலிடீ இன்னைக்கு!
சித்ராவோ கலங்கியபடி அவனை கட்டி அணைத்துக்கொண்டு டேய் விச்சு அண்ணா... இப்போ சரிடா ... ஆனா வேற யாரு முன்னம் இந்த மாதிரி பாடாதடா... நம்மளை தப்பா நினைப்பாங்கடா அண்ணா! நீ பாதி நான் பாதியா??? உன் வருங்கால பொண்டாட்டி கேட்டா... மவனே நீ சட்னி தான்டா !! என்னையும் கைமா ஆக்கிடுவாடா!
என்னது அண்ணாவா??
ஹேய்... நவி அக்கா ! யாரு என்ன நினைச்சா என்ன?? நான் சொன்னது உண்மையில்லைனு ஆகிடுமா ??? யாரு வந்தா என்ன?? நீ என் அக்கான்றது மாருமா??
ஹங்ங்... அக்காவா??? நல்லா குழப்புறாங்கடா சாமி!
அவனை முறைத்தவறே நீ என் அண்ணாங்கறதும் மாறாது!' என்றாள்.
அண்ணா பாருணா நவி அக்காவ....நான் அவளுக்கு அண்ணாவாம்!- என்றான் விஷ்வா சிவாவிடம் புகார் செய்தபடி.
பாரு ணா விஷ்வா அண்ணாவ...நான் அவனுக்கு அக்காவாம்!
நவிமா... முதல்ல பொறந்தால நீ அவனுக்கு அக்கா... பட் பயாலாஜிக்கலி ரெண்டாவது பொறக்கறவங்க தான் முதல்ல உருவான பேபி... சோ பயாலாஜிக்கலி அவன் தான் அண்ணா! ரெண்டுமே கரக்ட் தான்டா!' என்றான் சிவா.
அண்ணா என்ன ணா நீங்க?? யாராவது ஒருத்தர் சொல்றது தான் கரக்ட்!' என்று விஷ்வாவும் சித்ராவும் சண்டை போட தொடங்கினர்.
இப்போ நான் இதுக்கு ஒரு முடிவு சொன்னா எடுத்துப்பீங்களா ரெண்டு பேரும்??? என்றனர் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சஞ்சையும் ஆதியும்!
அவர்களை ஒரு பார்வை பார்த்த இருவரும் இதுக்கேல்லாம் நாங்க அசர மாட்டோம் என்றபடி நின்றனர்!