(Reading time: 22 - 43 minutes)

12. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

திடீரென்று ஒலித்த மொபைல் ரிங்டோனில் பழைய நினைவிலிருந்து மீண்டவர்கள் அப்போதுதான் நேரம் தெரியாமல் பேசியிருக்கிறோம் என்று உணர்ந்தனர்..நேரம் மாலை ஏழை நெருங்கிவிட்டிருந்தது..ஐய்யோ இவ்ளோ நேரம் ஆயிடுச்சா கீழே போகவேயில்லையே அத்தம்மா என்ன நினைப்பாங்க..இதோ வந்துட்றேன் என வேகமாக ஓட எத்தனித்தவளை கைப்பற்றி நிறுத்தி ஹே ரிலாக்ஸ் மகி எதுக்கெடுத்தாலும் ஏன் டென்ஷன் ஆகுற..அம்மா அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..மெதுவா போ என்று அனுப்பி வைத்தான் ராம்..

அவன் கூறியது போலவே யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை..ராஜசேகர் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருக்க மெதுவாக சமையலறை நோக்கிச் சென்றாள்..வா மகி..காபி எதுவும் சாப்டுறியா..எடுத்துட்டு வரலாம்நு நெனைச்சேன் சரி தூங்கிட்டு இருந்தநா டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேநு விட்டுட்டேன்..என்றார் சாதாரணமாய்..

இல்ல அத்தம்மா அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் டின்னர் ரெடி பண்றீங்களா நா எதாவது ஹெல்ப் பண்ணட்டா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

மகிம்மா இன்னைக்கு தான வந்துருக்க அதுவும் இப்போ தான் ஆபிஸ் போகாம ப்ரீயா இருக்க அதுகுள்ள என்ன கிச்சன் பக்கம்..கொஞ்ச நாள் மேரேஜ் லைப்ப என்ஜாய் பண்ணு எப்படியும் டெல்லி போனப்பறம் நீதான வேலை பாக்க போற..போ டீவி வேணா பாரு தன்வி கூட அங்கதான் இருக்கா..

என்ன தோன்றியதோ ராஜியை கட்டிக் கொண்டாள் மகி..தேங்க் யு அத்தம்மா நா ரொம்ப லக்கி..

போதும் போதும் உன் புருஷன் பாத்தா சண்டைக்கு வர போறான்,.ஆமா அதென்ன அத்தைநும் இல்லாம அம்மாநும் இல்லாம அத்தம்மா??

ஹா ஹா உங்களை அத்தைநு கூப்பிட எனக்கு பிடிக்கல அம்மாநு சொன்னா எங்கம்மாவ சொல்றனா உங்கள சொல்றனாநு விளக்கம் சொல்லனும் அதான் அத்தம்மா..எப்படி என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்..நல்லா பேசுற இப்போதான தெரியுது எங்க வீட்டு சாமியார் எப்படி சரண்டர் ஆனாருநு..

அவரை செல்லமாக முறைத்தாள் மகி..உண்மைதான்டா அவன் வீட்டிலதான் சகஜமாயிருப்பான் வெளில ரொம்ப காம் டைம்..அவன் வேலையே அதுக்கு ஒரு காரணமா கூட இருக்கலாம்..கல்யாணம் பத்தி பேசினா பிடி குடுத்தே பேச மாட்டான்..எங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டானோநு நினைச்சுருக்கேன்,அவன் உன் போட்டோவ காட்டி விஷயத்தை சொன்னப்போ அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு..தங்கவிக்ரகமா ஒரு குட்டி பொண்ணு எங்க வீட்டுக்கு வந்துட்டா..என்று நெகிழ்ச்சியாய் கூற..அவரை இயல்பாக்க எண்ணியவளாய் என்ன அத்தம்மா சீரியல்லலா டெரரரா மாமியாரை காட்டுறாங்க நீங்க என்னடானா என்ன கொஞ்சிட்டு இருக்கீங்களே என பொய்யாக அலுத்துக் கொண்டாள்..

வாலு எனக்கு சாதாரணமாவே கோபம் வராது என் பசங்களயே நா திட்டினது கிடையாது இதுல உன் கூட சண்டை போடுறதா..சரி நீ போய் ராமை சாப்பிட கூப்டுட்டு வா மகி..நா எல்லாத்தையும் எடுத்து வைக்குறேன்..

ராமை அழைப்பதற்காக தன் அறைக்குச் சென்றவள் அங்கே அவனை காணாமல் உள்அறையில் எட்டிப்பார்த்தாள்..அங்கும் இல்லையென திரும்ப எத்தனிக்க பின்னிருந்து தன்னவளை சிறைபிடித்தான் ராம்..எதிர்பாராமல் நடந்ததில் தடுமாற கட்டிலில் விழுந்தவனின் மேல் பூமாலையாய் அவனின் மகி..என்ன ராம் இது இப்படியா பண்ணுவீங்க பயந்தே போய்ட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.