நீ கூட தான் நேத்து என்ன பயமுறுத்தின நா எதாவது சொன்னேனா..அவளின் கூந்தலை கைகளால் அளந்தவாறே தன்னவளை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான்..
தன்னவனின் பார்வையில் கன்னம் சிவந்தவள் அவனை விட்டு விலக எத்தனித்தாள் ஆனால் ஒரு பயனுமில்லை ராமின் பிடி இன்னும் இறுகியிருந்தது..
ராம் அத்தம்மா சாப்ட வர சொன்னாங்க லேட்டா போனா தன்வி அக்கா என்ன ஓட்டித் தள்ளிருவாங்க..ப்ளீஸ் வாங்கப்பா போலாம்..
இன்னைக்கு என்ன ஆனாலும் நா சொல்றத நீ பண்ணிணாதான் நா இந்த இடத்தை விட்டு நகருவேன்..எப்பவும் மாறி என்னை ஏமாத்திட்டு ஓடலாம்நு மட்டும் நினைக்காத குட்டிமா ரொம்ப கஷ்டம்..
அவனின் பிடிவாதத்தை அறிந்தவள் சரி என்னனு சொல்லுங்க..என்றாள் தலை குனிந்தவாறே..
உனக்கு தெரியாதா…
ராம்..
நோ அதர் வே மை டியர்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
ஏன்ப்பா இப்படி பண்றீங்க…சரி கண்ணை மூடுங்க..
ஹலோ நா ஏன் கண்ணமூடனும் அதெல்லாம் முடியாது..வேணும்னா நீ மூடிக்கோ என்றான் சிரிப்பை அடக்கியவாறு,
அவன் மார்பில் செல்லமாக குத்தியவள்..கண்களை மூடியவாறே அவன் கண்களை தன் கைகளால் மூடிய வண்ணம் அவன் கன்னம் நோக்கி செல்ல கைகளை அகற்ற முயன்றவன் தன்னிச்சையாக முகத்தை திருப்ப மகியின் முதல் முத்தத்தை பெற்றது அவனின் இதழ்கள்..என்னவென்று யோசிப்பதற்குள் இருவரும் ஒருவித மோன நிலையை அடைய சில நொடிகள் அப்படியே கரைய கடிகாரம் மணி எட்டு என்பதற்கான ஓசை எழுப்ப தன்னவனை விட்டு எழுந்து திரும்பி நின்றவாறு புடவையை சரி செய்தாள் மகி..
குட்டிமா சத்தியமா ப்ளான் பண்ணிலா எதுவும் நடக்கல சொல்ல போனா இதுல என் தப்பு எதுவுமேயில்லை என்று கூறி சிரிக்க அருகிலிருந்த தலையணையை கொண்டு அவனை அடித்தவள்..அவன் முகம் பார்க்காமல் கீழே ஓடிவிட்டாள்..
அங்கே ஏற்கனவே சாக்ட்சி உட்பட அனைவரும் அமர்ந்திருக்க தன்வி,ஏன் மகி நீதான் சாப்பிட கூப்டுறதுக்காக முதல்ல போன ஆனா வரதுக்கு இவ்ளோ நேரமா என்றாள் கிண்டலாய்..
இல்லக்கா அது..
போன் பேசிட்டு இருந்தேன் தன்வி அதான் என்றவாறு வந்தமர்ந்தான் ராம்..
நிம்மதி பெருமூச்சு விட்டவள் தானும் பரிமாறுவதாக கூறி எல்லோருக்கும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்..ராமின் அருகில் வந்தவள் குனிந்த தலை நிமிராமல் வைத்துவிட்டு நகர வேண்டுமென்றே தொண்டையை செருமினான் யாரும் அறியா வண்ணம் அவனை முறைத்தவள் அனைவருக்கும் பரிமாறி முடித்தாள்..இவ்வாறாக இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் செல்ல..மாடி ஏறப் போனவர்களை அழைத்தான் பரணி..
சொல்லு மச்சி -ராம்
ஒரு டென் மினிட்ஸ் பேசனும்டா உன்கூட சாரி ராம் டிஸ்டர்ப் பண்றதுக்கு..
டேய் அண்ணா ஓங்கி ஒரு அடி வச்சேன்னா தெரியும் என்ன புதுசா சாரிலா சொல்லிட்டு இருக்க..
அதுக்கில்லடா மகி..
ஒண்ணும் சொல்ல வேணாம் போங்க ராம் நீங்க பேசிட்டு வாங்க..
நீயும் வா மகி -பரணி..
பரவால்லைணா நீங்க பேசுங்க நா ரூம்க்கு போறேன்..
மகி இதுக்கு மேல உனக்கு தெரியாம ராம்கிட்ட பேசுறதுக்கு ஒண்ணுமில்லை நா பேசனும்னு சொன்னது உன்கூடவும்தான்..
சரி வாடா மாடிக்கு போலாம் என்று கூறி மொட்டை மாடிக்குச் சென்றனர்..
பரணி அமைதியாகவேயிருக்க.,என்னாச்சு டா பரணி சொல்லு
இல்லை ராம் சாக்ட்சி விஷயமாதான்..
மகியும் ராமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..
என்ன முடிவு பண்ணிருக்கீங்கண்ணா ஆர்வமாய் கேட்டாள் மகி..
தெரிலடா ரொம்ப குழப்பமாயிருக்கு..
டேய் அவ நல்ல பொண்ணுடா..-ராம்
அது தெரியுது ராம் ஆனா அவ பேமிலி..அவங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு எதிரா நாம வேலை பாத்துட்டு இருக்கோம்டா அப்பறம் எப்படி…
அண்ணா அதுவேற இதுவேற அவளை வளர்த்தது அவ தாத்தா தான் அவரை மட்டும் பாருங்க அதவிட்டுட்டு ரொம்ப யோசிகாதீங்க..
அது புரியுது மகி ஆனா இத அவ எப்படி எடுத்துப்பாநு தெரியலையே..
பரணி சாக்ட்சிக்கு உன்னவிட அவங்க ஒண்ணும் பெருசா போய்றமாட்டாங்க அப்படி நினைக்குறவ உனக்காக இவ்ளோ தூரம் வந்துருப்பாளா..நாளைக்கு அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிரு அதுக்கப்பறம் அவ இஷ்டம் என்ன சொல்ற??
ம்ம்ம் ஓ.கே ராம் என்று அறைகுறை மனதோடு கீழிறங்கிச் செசன்றான்..