பாயல் கூறியதை வைத்து இன்று எதுவும் க்ளு கிடைக்குமா என அன்றைபோலவே இரவில் மருத்துவமனைக்குச் சென்றனர்..எதிர்பார்த்ததை போன்றே அதர்வாவும் விநாயக்கும் இருந்தனர்..DCP அன்று வரவில்லை..
என்ன அங்கிள் இது பாயலை பத்தி விசாரிச்ச வர அவளுக்கு லவர்லா இருக்குற மாறி தெரில ஆனா எவனோ வந்து விசாரிச்சுட்டு போய்ருக்கான்..வீட்டுல இந்த ராம் தொல்லைய எப்படி ஒழிச்சுகட்றதுநு பாத்தா இது ஒரு புது ப்ரச்சனையா வந்து நிக்குது..என்னவோ எனக்கு ஒண்ணும் சரியா படல..
அதர்வா ஒரு வேளை அவளைபத்தி விசாரிச்சது ஏன் ராமா இருக்க கூடாது??
மாமா!!!!!!
ம்ம் வாய்ப்புகள் இருக்கு அதர்வா..அவளை பத்தின விஷயம் துளி அளவு வெளியே போனாலும் நாம உள்ளே போக வேண்டியதுதான்..
கவலைபடாதீங்க மாமா..அந்த ராமை கண்காணிக்குறதுக்கு ஆள் போட்றேன்..என்ன செய்யலாம்நு பாப்போம்..
ACPயிடம் நடந்ததை கூற அவரோ ராம் கொஞ்ச நாள் நீங்களும் பரணியும் ஏன் உங்க நேட்டிவ் போய்ட்டு வர கூடாது??
என்ன சார் இவங்களுக்கு பயந்து எங்களை ஓட சொல்றீங்களா??-பரணி..
பரணி டென்ஷன் ஆகாதீங்க..உங்களை போக சொல்றதுக்கு ரீசன் அவங்களுக்கு பயந்து இல்ல அவங்களை நம்மகிட்ட சிக்க வைக்கதான்..அவங்களுக்கு டவுட் இருக்குற ஒரே ஆள் நீங்கதான் நீங்களே இங்க இல்லனா அவங்க கொஞ்சம் சுதந்திரமா சுத்துவாங்க அதனால நமக்கு பல ஹெல்ப் கிடைக்கும் கண்டிப்பா..
ம்ம் நீங்க சொல்றதும் கரெக்ட் தான் சார்..பட் ஒரு டூ டேஸ் ஆகட்டும் அமர்நாத் சார்கிட்ட நா பேசுற விதமா பேசுறேன்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
மறுநாளே தங்களை பின்தொடரும் நபர்களை கண்டு கொண்டனர்..பரணி அநவசியமாக எங்கும் செல்வதை தவிர்த்தான்..அது போன்றே ராமும் தன் அறையே என்றாலும் பரணியிடம் அநாவசியமாக பேசிக் கொள்ளவில்லை..
மறுநாள் ஒரு முடிவோடு அமர்நாத் பவனிற்கு சென்றான் ராம்..
A.K. நா சென்னை கிளம்பலாம்நு இருக்கேன்..
என்ன ராம் திடீர்னு..
அப்பாக்கு கொஞ்சம் உடம்பு முடில அதான்..அதுவும் போக அம்மா நா அவங்க கூட கொஞ்ச நாள் இருக்கனும்னு ஆசை படுறாங்க..அதான் டெம்ரவரியா எதாவது வேலை தேடி அங்கேயே கொஞ்ச நாள் இருக்கலாம்நு பாக்குறேன்..
அமர்நாத் எதுவுமே பேசவில்லை..
உங்க பார்வைக்கு அர்த்தம் புரியுது A.K நீங்க குடுத்த வேலைய நா முடிக்காமலேயே கிளம்புறேன்னு பாக்குறீங்க..பட் எனக்கு வேற வழி தெரில..கண்டிப்பா அம்மாவ கன்வின்ஸ் பண்ணிட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்துருவேன்..அதுவரை..
ம்ம் உன் நிலைமை புரியுது ராம் உன் முடிவ மாத்த சொல்ற அதிகாரம் எனக்கு கிடையாது…என்னைக்குமே குடும்பம்தான் முக்கியம்..நீ போய்ட்டு வா..பட் அகெயின் இங்க வந்தா எந்த தயக்கமும் இல்லாம என்னை வந்து பாரு..இந்த அமர்நாத் பவனின் கதவு உனக்காக எப்பவுமே திறந்திருக்கும்..
தேங்க்ஸ் A.K..உடம்பை பாத்துக்கோங்க..பாதுகாப்பா இருங்க..இதை சொல்லும் போது ஏனோ குரல் உள்ளேயே போயிருந்தது ராமிற்கு..
என்ன அதர்வா எதாவது பண்ணிடுவானா??சிரிப்புடனே கேட்டார்..
A.K.!!!
பயப்படாத ராம் என் புள்ள அந்த அளவுலா போமாட்டான்..நீ சந்தோஷமா போய்ட்டு வா..சாக்ட்சிகிட்ட எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் வாங்கிக்கோ..எதுக்கும் யூஸ் ஆகும்..
அண்ணா ஏன் வேலைய விட்டு போறீங்க..நா எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க..என கிட்டதட்ட அழும்நிலையில் இருந்தாள் சாக்ட்சி..
ஹே அதெல்லாம் ஒண்ணுமில்லைடா..அப்பா அம்மாவ பாக்கனும் போல இருக்கு போறேன் வேற ஒண்ணுமில்லை..என ஏதேதோ கூறி அவளை சமாதானபடுத்திவிட்டு வெளியே வந்தவனின் எதிரில் மார்பின் குறுக்காய் கைகளை கட்டியவாறு வந்து நின்றான் அதர்வா..
என்ன ராம் வந்தன்னைக்கு டயலாக்லா செமயா பேசுனீங்க இப்போ என்னாச்சு? ?
ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்திருந்தான் ராம்..
இதுக்குதான் அவங்கவங்க தகுதிக்கு ஏத்த இடத்துல இருக்கனும்ங்கிறது..சரி சரி செட்ல்மெண்ட்லா கரெக்டா பாத்து வாங்கிட்டு போங்க..
மீட் யூ ஸூன் இன் டிவெரெண்ட் என்விரான்மெண்ட் அதர்வா..பாய் பார் நவ் என நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு நகர்ந்தான் ராம்..
அதர்வா கோபத்தோடு ஏதோ பேச தொடங்க அந்நேரம் அவன் மொபைல் ஒலித்தது..அழைப்பை ஏற்றவன் சொல்லுங்க மாமா என்றவாறே தனதறைக்குச் சென்றான்..
என்னாச்சு அதர்வா??ஏன் குரல் ஒருமாறியிருக்கு..-விநாயக்..
நடந்ததை கூறியவன்,இருந்தாலும் அவனுக்கு திமிரு ஜாஸ்திதான் மாமா..எப்படி பேசிட்டு போறான்னு பாருங்க..
சரி விடு அதர்வா.,எதுக்கும் நம்ம ஆட்களை அனுப்பி மேலோட்டமா அவனை கண்காணிக்க சொல்லு..எங்க வேலைக்கு போறான்..வேற யாரையாவது மீட் பண்றானானு பாக்க சொல்லு..