அவன்தான் ஊரைவிட்டே போறானே அங்க எதுக்கு அவனை ட்ரேஸ் பண்ணணும்??
புரியாம பேசாத அதர்வா எப்போ ஒருத்தர் மேல சந்தேகம் வந்துடுச்சோ அதுக்கு மேல அவங்களை சாதாரணமா நினைக்ககூடாது..அதுவும் இல்லாம இப்போ கொஞ்ச நாளா யாரோ நம்மளை நெருங்க ட்ரை பண்றமாறியே தோணுது அதான் ஜாக்கிரதையா இருக்கலாமேநு நெனைக்குறேன்..
அவர்கள் கூறியது போலவே அவர்களை அதர்வாவின் ஆட்கள் பின்தொடர அவர்கள் ACPயின் உதவியுடன் கம்பெனியில் சேர்ந்தனர்..இதற்கிடையில் மருத்துவமனையில் அவர்கள் பாயலை பற்றி விசாரிக்கச் சென்றபோது வேறு ஒரு பகுதியிலிருந்த கேமராவில் இவர்களை கண்டுகொண்ட அதர்வா பாயலை மிரட்டி கேட்க அவளும் நிலைமை உணர்ந்து ஆமா என்னை ஒருத்தர் விரும்புறாரு அத பத்தி உங்களுக்கு என்ன??என்று கூறிவிட,அதர்வாவிற்கோ மனதில் திட்டம் வேறு மாதிரியாய் ஆக பாயல் உயிரோடிருப்பது அவனுக்கு தெரியாதூது ஆனால் அதை உறுதிபடுத்திக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறான்..அவளை பற்றிய ஏதோ ஒன்று அவனிடடம் இருக்கிறது அதை முடக்கிவிட வேண்டும் எக்காரணத்தை கொண்டும் பாயல் பற்றிய சந்தேகங்கள் யாருக்கும் வர கூடாது..அதற்கு அவனை என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கும் போதுதான் உள்நுழைந்தவள் நம் மகி..ஆனால் இவை அனைத்துமே ராமிற்கு தெரியாமல் நடந்தது..
அந்த நிலைமையில் தான் ராம் மகியிடம் தன் காதலை கூறியதினத்தன்று ACP அவனை அழைத்திருந்தார்..அவர்களின் மருத்துவமனையில் இன்னொரு குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்..அது மட்டுமன்றி அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை மீது புகார் கொடுத்திருப்பதாகவும் கூறினார்..ராமும் பரணியும் அங்கே வருவதாய் கூற ஏதேதோ காரணம் கூறி அவர்களை வரவிடாமல் தடுத்துவிட்டார்..
அதே நேரம் விநாயக்கிடம் நடந்ததை கூறினான் அதர்வா..அவன் ராமை விடுத்து மகியை கண்காணிக்க கூறினான்..அது ஒரு பெண் என்ற பட்சத்தில் யாருக்கும் சந்தேகம் வருவது கடினம் என முடிவு செய்து அதை செயல்படுத்தவும் செய்தனர்..அவளின் மூலம் இவர்களின் காதலை அறிந்தவர்களுக்கு ஒரு சிறு நிம்மதி பாயல் உயிரோடில்லை என ராம் நம்பிவிட்டதாகவே முடிவுக்கு வர அவன் கையிலிருக்கும் பாயலை பற்றிய ஆதாரத்தை மட்டும் வெளிவராமல் பார்த்துகொண்டால் போதும் என மகியை வைத்து இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தனர்..இதற்கு முக்கிய காரணம் அந்த பெற்றோர் கொடுத்த புகார் தற்போது வரை பத்தோடு பதினொன்றாக இருக்கும் கேஸ் ஏதும் ப்ரச்சனை என்றால் கூட DCPஐ வைத்து சரி கட்டிவிடலாம்…ஆனால்,பாயல் விஷயம் தெரிய வந்தால் பூதாகரமாக வெடித்துவிடும் என்பதே..இதற்கிடையில் சென்னை செல்வதாய் கூறி சாக்ட்சி கிளம்ப அவள் ராமை சந்தித்து அவன் ஏதாவது கூறிவிடகூடாது என்று பயந்து ஏர்போர்டிலிருந்து வரும் வழியிலேயே அவளை கடத்த முடிவு செய்தனர்..ஆனால் அதையும் மீறி அவள் ராமிடம் வந்துவிட்டாள்..வெளியிடங்களில் அவனை கண்காணிப்பவர்களுக்கு ஏனோ தங்களை யாரோ பின் தொடர்வதாய் தோன்ற விநாயக் அவர்களை பொது இடங்களில் தொடர வேண்டாம் என கூறிவிட்டான்..
இவ்வாறாக நடந்ததை கூறிமுடிக்க மகியும் சாக்ட்சியும் இன்னுமே அவன் பேச்சிலிருந்து மீளவில்லை..ராமும் பரணியும் இருவரையும் உலுக்க..சாக்ட்சி தான் பேச தொடங்கினாள்..அந்த பாப்பாலா பாவம் இல்லணா..அதை பெத்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்..கேவலம் காசுக்காக அங்கிள் இந்த அளவு பண்ணிட்டாறே..தாத்தாக்கு தெரிஞ்சா ரொம்ப மனசு உடைஞ்சு போய்ருவாரு..என பேசிக் கொண்டே போக பரணி அவளை சமாதானப்படுத்தினான்..மகியோ வாயே திறக்கவில்லை..ராமும் அங்கு வைத்து எதுவும் பேச விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டான்..
வீட்டிற்கு வந்து உடைமாற்றி விட்டு கட்டிலில் அமர்ந்துவிட்டாள் மகி..அவளருகில் அமர்ந்தவன் அவள் கைகளை ஆதரவாய் பிடிக்க அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..ராம் என்னென்னவோ கூறியும் அவள் விடுவதாயில்லை..ஒரு எல்லைக்கு மேல் அவளே விடட்டும் என்று அவளை தட்டிக் கொடுத்தான்..சிறிது நேரத்தில் அவனை விடுவித்தவள் அவன் என்ன கூறுவான் என ஏறிட்டாள்..
குட்டிமா நா வேணா இந்த அஸைண்மெண்ட்டை விட்டுறவா??
ஹே ச்சச்ச என்ன ராம் நீங்க..இது உங்களுக்கு எவ்ளோ முக்கியம்நு எனக்கு தெரியாதா..ஏனோ நீங்க சொன்னதெல்லாம் கேட்டு மனசே ஒருமாறி ஆயிடுச்சு..இதெல்லாம் படத்துலயும் கதைலையும் வந்தாலே கஷ்டமாயிருக்கும்..அப்படியிருக்க என்னை சுத்தியே நடக்குதுநு நெனைக்கும் போது ஒருமாறி பயந்துட்டேன் வேற ஒண்ணுமில்லை..இதுக்கு போய் என்னென்னவோ பேசுறீங்க..ஆனா என்ன ஆனாலும் அவங்களுக்கு தண்டனை கிடைச்சே தீரனும்ப்பா..
கண்டிப்பா கிடைக்கும் மகி..அதையெல்லாம் நா பாத்துக்குறேன்..நீ கண்டதை போட்டு மனசை குழப்பிக்காத..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அன்றைய பொழுது இவ்வாறாக முடிய மறுநாள் காலையில் ராம் விழிக்கும் பொழுது மகி அங்கு இல்லை எங்க போய்ருப்பா தெரிலையே என யோசனையோடே எழுந்து பல் துலக்கிவிட்டு வந்தவனின் எதிரில் அவளுக்கே உரிய புன்னகையோடு கையில் காபியை ஏந்தியபடி நின்றிருந்தாள் மகி..குட்மார்னிங் ராம்..
குட்மார்னிங் குட்டிமா..என்ன என்னை எழுப்பிகூட விடாம அப்படி எங்க போய்ட்ட??
சாரிப்பா இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..நிறைய வேலையிருக்கு வந்துட்றேன் என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிவிட்டாள்..