"அய்யோ அதெல்லாம் வேண்டாம்... உங்க ஸ்பெஷல் டீயே கொடுங்க.."
"நேத்து வயிறு வலிச்சிருக்கும் நிரு... அதனால இஞ்சி இல்லாம வெறும் ஏலக்காய் போட்டு டீ தரேன்... இஞ்சி சூடு அதனால வேண்டாம்.."
"சரி ஆன்ட்டி..." என்றவள் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேப்பர் படிக்க... அம்பிகா அவளுக்கு டீயை கொடுத்துவிட்டு சஞ்சய்க்கு எடுத்து வந்த கஞ்சியை ஆற வைத்துவிட்டு... அவரும் உட்கார்ந்து டீ குடித்தார்.
"ஏன் நிரு... உனக்கு என்ன டிஃபன் வேணும்னு சொல்லு... நான் செஞ்சு தரேன்.."
"இல்ல ஆன்ட்டி நான் காலையில குளிச்சிட்டு தான் சாப்பிடுவேன்... அதனால நான் வீட்டுக்கு போய் சாப்ட்டுக்கிறேன்... அதான் நேத்து சாப்ட்டேன் இல்ல..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சஞ்சய் தயாராக
...
This story is now available on Chillzee KiMo.
...
ியா அனுப்பிறியேப்பா.." என்று கேட்டார்.
அப்போது தான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது... நேற்று அவள் வெற்றியோடு போனில் பேசியதை கேட்டு... பொறாமையும் கோபமும் அவள் மீது அவனுக்கு ஏற்பட்டது... அதன் விளைவு இப்படி செய்துவிட்டான். ஆனால் இப்போது தான் அன்னை சொன்னதும் தன்னுடைய தவறு புரிந்தது...