“சுருதிக்கு என்னம்மா?”
தாயை ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள்.
“அவள் தற்கொலை செய்துக்கிட்டாளாம். அவங்க வீட்டில் வேலை செய்யும் பொன்னம்மா போன் செய்தாள்.”
“அம்மா!” அதிர்ந்தாள்.
“அவள் தன் மேல் தீ வைத்துக்கொண்டாளாம். கடைசி நேரத்தில்தான் அவளது பெற்றோர் பார்த்திருக்கின்றனர். காப்பாற்ற முடியவில்லையாம்.”
அவளால் அந்த செய்தியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
அவளுக்கு சுருதியின் அழகு முகம் கண்ணில் வந்து நின்றது.
“இது உண்மைதானாம்மா?” சந்தேகத்துடன் கேட்டாள்.
அன்பரசியின் அழுகை அதை சத்தியம் என்றது.
“சரி! கிளம்பு. போகலாம்.”
எங்கேயும் மகளுடன் கிளம்பியிராத அன்பரசி கூப்பிடவும் திகைத்தாள்.
“எங்கேம்மா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
த அணைப்பு தேவையாயிருந்தது.
அவன் சொல்லச் சொல்ல பொன்னம்மா அதிர்ந்து போனாள்.
சகோதரியின் நடவடிக்கையில் சந்தேகம் தோன்ற அவளைத் தேடியவன் சமையல் அறையில் சம்மணம் போட்டு முக்கல் முனகல் தவிர ஆர்ப்பாட்டாம் பண்ணாமல் அமர்ந்த வாக்கிலேயே எரிந்து உயிர் விட்டவளை கண்ணாரக் கண்ட கொடுமையை சொன்னான்.