அவன் பேசப்பேச அதிர்ச்சியில் பேசாதிருந்தாள்.
என்ன ஒரு வைராக்கியம் இருந்திருந்தால் சாக வேண்டும் என்ற முடிவெடுத்து எரியும் போது கூட கத்தாமல் அமைதியாக இருந்திருப்பாள். சில பேர் தற்கொலை எண்ணத்தில் தவறான முடிவெடுத்துவிட்டு பிறகு தன்னைக் காப்பாற்றச் சொல்லி துடிப்பார்கள். அந்த மாதிரி எதையும் சுருதி செய்யவில்லை.
அவள் தனது கடைசி விநாடிகளில் இருக்கும் போதே விருந்துக்கு சென்றிருந்த பெற்றோர் வந்துவிட்டனர். ஆனால் அவர்கள் வந்த போது காலம் கடந்திருந்தது. அவளைக் காப்பாற்ற முடியவில்லை.
தேன்மொழி ஸ்டவ் வெடித்துதான் சுருதி இறந்துவிட்டதாக கூறக் கேட்ட சுதன் அதை மறுக்க எண்ணி எழுந்தான்.
பொன்னம்மா அவனை அடக்கிவிட்டாள்.
ஒரு பெண்ணைப் பெற்ற தாயாக அவளுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோபமாக தன்னைக் குற்றவாளியாக்கி பேசியது நினைவு வந்தது.
அவளது தாத்தாவையும், அத்தானையும் அவளிடம் இருந்து பிரித்ததாக குற்றம் சொன்னாளே. அன்றே அவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். தேவை இல்லாமல் அவளை கலங்க வைத்து தப்பான ஒருவனிடம் சரணடைய செய்ய தான்தான் காரணம் என்று திட்டவட்டமாக நம்பினாள்.