“அவ எப்படிம்மா சொல்வா? எங்களை வேண்டாம்னு ஒதுக்கினவ எப்படி சொல்வா?”
அவருக்கு அதைப் பற்றி பேச விருப்பமில்லை என்று புரிந்தது. இப்போது தெரிந்த உண்மை போன்று இவர்களுக்கு இடையே என்ன பிரச்சினைன்னும் தானே தெரிய வரும். அதுவரைக்கும் எதற்கு அலட்டிக்கொள்ள வேண்டும் என்று அமைதியானாள். ஆனால் அந்த உண்மை அவளை பேரிடியாய் தாக்கும் என்று அப்போது அவளுக்குப் புரியவில்லை.
புகழேந்தி ஒரு கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கிளம்பினார். ராமுவிடம் கல்லூரியிலிருந்து வந்திருந்த அழைப்பிதழைக் கொடுத்து அங்கே வண்டியை விடுமாறு சொல்லிவிட்டு பின்சீட்டில் சாய்ந்தமர்ந்தார்.
கல்லூரியின் பெயரைப் பார்த்தவன் ஆச்சர்யத
...
This story is now available on Chillzee KiMo.
...
ியர்த்தாற்போன்று மாலினி உள்ளே நுழைந்தாள்.
“என்ன டார்லிங் டயர்டா இருக்கீங்க? எங்கே போயிட்டு வர்றீங்க?”
அவர் அழைப்பிதழை எடுத்து நீட்டினார்.
“இங்கேதானே சிந்தனா படிக்கிறா. அப்பான்னு உங்களை காட்டி பெருமை அடிச்சுக்க கூப்பிடச் சொல்லியிருப்பா.” குற்றம் சாட்டும் அவளை ஏறிட்டார்.